இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருநாள்
ஊரில் வந்தது ஒருநாள்
ஊரார் விரும்பிய திருநாள் !
தேரில் தெய்வம்வரும் நாள்
தேடியே இன்பம் தரும்நாள் !
தெருவில் எங்கும் ஊர்வலம்
தெரிந்தவர் முகத்தில் குதுாகலம் !
தரையில் போட்டனர் கோலம்
தட புடல் போட்டது மேளம் !
புதிதாய் உடைகளும் அணிந்தார்
புன்னகைப் பேச்சிலே கலந்தார் !
விதவித மாகவே நடந்தார் !
வேடிக்கை கண்டே மகிழ்ந்தார் !
அப்பா அம்மா வந்தனர்
அன்பாய் வாங்கித்தந்தனர் !
சிப்பாய் போல் நான் நடந்தேனே !
சிரித்தே துள்ளி மகிழ்ந்தேனே !
32