30
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
‘கம்’ என்றால் சந்தோஷம், வீட்டின்பம், தேவலோகம் என்றெல்லாம் அர்த்தம் உண்டு.
ஆகவே, அகம் என்பது சந்தோஷத்தைத் தருவது. சொர்க்கலோகம் போன்ற உணர்வை உள்ளும் புறமும் தருவது என்பதே அதன் ரகசியப் பொருளாகும்.
சந்தோஷம். அதைத்தான் அகம் என்றனர்.
ஆக, அகம் சந்தோஷம் கொண்டதாக இருக்கிற பொழுது. அந்த இனிய உணர்வுகளை முகந்து கொண்டு, வெளியே தெளிவாகக் காட்டும் பண்பால்தான், அதை முகம் என்றனர்.
‘கம்’ என்றால் மூன்று என ஒரு பொருள் உண்டு. இப்போது முகம் என்றால் மூன்று வகையான சந்தோஷம் காட்டுகிற ஒரு அங்கம் என்பதாக நாம் அறிந்து கொள்கிறோம். அந்த மூன்று வகைகள் என்ன?
1. சந்தோஷம் 2. மகிழ்ச்சி 3. ஆனந்தம்.
இந்த மூன்றும் ஒன்றுதானே! ஒன்றைத் தானே குறிக்கிறது. இதில் எங்கே இருக்கிறது பிரிவு என்று உடனே எண்ணத் தோன்றுகின்றதல்லவா!
அப்படித் தோன்றினால் நீங்கள் இந்தப் பகுதியை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று புரிகிறது.
இந்த மூன்றும் ஒன்றுபோல் தெரிவது வெளிப் புறத்தில்தான். மேலோட்டமாக அப்படித்தான் தெரியும். ஆனால் உட்பொருளே ஒப்பற்ற பொருளாகும்.