பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r- * C/C உங்களுக்கு வழிகாட்ட பயிற்சி பெற்ற ஒரு குரு ളേഖ குருவின் அருளால் தான் பழுதில்லாத பயன்கள் கிடைக்கும். குரவன் அருளில் குறிவழி மூலமாக அந்த மகா சக்திகளைப் பெற முடியும். (குரவன் = குரு) பிராணாயாமத்துடனும், யோகாப்பியாசமும் தொடர்ந்து 12 ஆண்டுகள் குருவின் மேற்பார்வையில் செய்து வர வேண்டும் இந்த கால அளவை பேரெல்லை என்றும் கூறுவார்கள். நீடும் துரம் கேட்டல் நீண் முடிவு ஈராறு (626) என்பது தான் அந்தப் பாடல் காட்டும் பாதையாகும். ஈராறு என்றால் பனிரெண்டு ஆண்டுகள். நீடும் துரம் என்றால் நீண்டகாலம் பொறுத்தல் என்றும், கேட்டல் என்றால் செவி அறிவுறுத்தப் பெறுதல் என்றும் அர்த்தம். ஒருவர் பனிரெண்டு ஆண்டுகாலம் பொறுமையாகா பாடம் கேட்டும். பயிற்சி பெற்றும் வந்தால் என்ன கிடைக்கும். நீடுங்கலைக் கல்வி, நீள்மேதை, கூர்ஞானம், பீடு எல்லாம் கிடைக்கும். நீள் மேதை என்றால் மறைவிலா அறிவுத் தெளிவு. கூர்ஞானம் என்றால் கூர்மையான நிறையறிவு. நிலை நிற்கும் கலை உணர்வும் அவ்வுணர்வுகள் தரும் கல்விச் செறிவும், அதனால் வரும் தெளிவுணர்வும், தெளிவால் பெறப்படுகின்ற நுண்ணுணர்வு போன்ற பெருமைகள் எல்லாம் கிடைக்கும். - பிராணாயாமத்தின் மூலமாகப் பேரின்பம் தரும் பயன்களும் கிடைக்கும் என்றால் அது எப்போது கிடைக்கும்? ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்தால், ஏழாவது ஆண்டில் அந்த சித்திகளும், rFloa, 1. ம்ெ ம ஃாமமாம் r£Ꮈ ᎪᎿ rfi H. , rr - ?,