பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வீரர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிதான் வரும் என்பதே தெரியாது. வரையறையோ, விதிமுறையோ கிடையாது என்றாலும், அவர்கள் ஆர்வத்துடன் அயராது போட்டியிட்டனர். அந்த அளவுக்கு, அவர்களுக்கு உடலில் நெஞ்சுரமும், பேராற்றலும் நிறைந்திருந்தன.

முதலாவதாக, எல்லோரும் நீளத்தாண்டலில் பங்கு பெற்றனர். அதிலே குறிப்பிட்ட அளவு தாண்டியவர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே வேலெறியும் போட்டியில் (Javelin Throw) கலந்து கொள்ள அனுமதிக்கப் பெற்றனர். விரைவோட்டத்திற்குத் (Sprint) தேர்வு செய்யப் பெற்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முதலாவதாக வந்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள், விரைவோட்டம் ஓடியபிறகு, மூன்று பேரை மட்டுமே சிறந்தவர்கள் என்ற தெரிவு செய்தனர். இவ்வாறு முன்னால் ஓடிவந்த மூன்றுபேர் மட்டுமே நான்காவது நிகழ்ச்சியான தட்டெறியும் (Discus Throw) போட்டிக்கு அனுமதிக்கப் பெற்றனர். இந்நிகழ்ச்சியிலும் இறுதியாக அதிக தூரத்தை எறிந்த இருவரும் வெற்றி வீரர்களாகக் கருதப்பட்டனர்.

இந்த இருவரும் வெற்றி வீரன் (Champion) எனும் விருதைப்பெற மல்யுத்தம் செய்தனர் அதில் வெற்றி பெற்றவனே வீரன் என அழைக்கப் பெற்று பாராட்டப் பெற்றான், பரிசளிக்கப் பெற்றான்.

ஆக, ஒரு போட்டியிடும் உடலாளன் (Athlete) வெற்றி, வீரனாக வர, அவன் நீளத் தாண்டல், வேலெறிதல், விரைவோட்டம் ஓடுதல், தட்டெறிதல், மல்யுத்தம் செய்தல் என்ற ஐந்து நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெறவேண்டியிருந்தது.