80
குணசேகர் தன் பெயரைக் கூறியவாறு கை குலுக்கினார்.. இன்பநாதன் வணக்கம் செய்தவாறு அறிமுகம் செய்து கொண்டார்.
இவர் பிரபல வியாபாரி என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன், விளையாட்டுத்துறைக்கு எப்பொழுது வந்தார்! எப்படி கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தார் என்பது தான் எனக்குப் புரியவில்லை என்றார் குணசேகர்.
தான் சொல்வது இருபது வருடத்திற்கு முந்தைய கதை அப்ப நானும் விளையாட்டுல கெட்டிக்கார வாலிபனாதான் இருந்தேன். பணக்காரங்க எல்லாம் நல்லா விளையாடினா தான், தான் வச்சிருக்குற பணத்தை நல்லா அனுபவிக்க மூடியும், இல்லேன்ன, மருந்து சாப்பிட்டுகிட்டு பட்டினியா கிடக்க, மத்தவங்க அவங்க பணத்தை அனுபவிப்பாங்கங்குற கொள்கையை நான் முழு மனசா ஆதரிக்குறவன். அதனால தான் நானும் அதிகமா விளையாண்டேன்.
என்னல இனிமே போட்டியில ஆட முடியாதுங்கற நிலைமை வந்தப்ப நான், என் பேருல ஒரு கழகத்தை நிறுவி, அதுக்காக வெளியில இருந்து விளயாட்டு வீரர்களைக் கூட்டி வந்து, நானே எல்லா செல்லையும் ஏத்த கிட்டு உருவாக்குனேன்: அப்பதான் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. என்று சிந்தாமணி சிரித்த நிறுத்திக் கொண்டார்.
இன்னொரு காபி சாட்பிடலாமே என்று ஆர்டர் கொடுத்தார் தயாளன். பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது. நேரம் போவதும் தெரியவில்லை. குணசேகருக்கோ ஒரு புதுமையான அனுபவத்தைக் கேட்கப் போகிறோம் என்ற படபடப்பு இருந்தது. இன்பநாதனுக்கும் அது புதுமையாகத் தான் இருக்கும் என்பது போல உணர்வு வந்தது.
சிந்தாமணி தன் அனுபவத்தை கூற முற்பட்டார்.
எனது விளையாட்டுக் குழுவிற்கு பத்து பேர்கள் தேவை என்பதால், நல்ல சிறந்த வீரர்களைத் தேடிப் புறப்பட்டேன்.