பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கோயில்களில் நைவேத்தியங்களைப் பெற்று வாயில் போட்டுக்கொண்டதும் கைகளை அங்குள்ள தூண்களில் துடைப்பது தான் பக்தர்களின் பண்பாடாக இருந்து வருகிறது. அதே தூண்களைப் பிற்கு பலரும் சும்மா தோடுகிறார்கள், தட்டுகிறார்கள் தூணில் பூசப்பட்ட, நைவேத்தியச் சின்னங்கள், என்னென்ன கிருமிகளின் விளைவிடமாக இருக்குமோ யாரே கூறமுடியும்? அத் தூண்களைத் தொடும் கைகள் வாயருகும், நைவேத்தியம் பெறவும் விரைகின்றன. இவை எல்லாம் தான் ஆரோக்கிய அம்சங்களா?

கோயில்களில் உள்ள பண்ணிய தெப்பக்குளங்கள் கிருமிகளின், புழுக்களின் பிறப்பிடம். அவற்றில் மக்கள் இறங்குகிறார்கள்; கை கால் சுத்தி செய்து கொள்கிறார்கள். சில புண்ணியாத்மாக்கள் ஸ்தானம் செய்து தங்கள் கட்டைக்கு மோட்சம் தேடும் புனித கங்கர்யத்தில் ஈடுபடுவதும் உண்டு.

இவ்விதமான அறியாமைகளை வளர்க்கின்றன கோயில்கள், பகுத்தறிவு மிகுந்த இந்த யுகத்திலே அறியாமை இன்னும் வளரவிடுவது மனித தர்மமாகாது. எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி புகட்டப்பட வேண்டும்.

வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் பெண்களுக்கும், தேகப்பயிற்சியே இல்லாத மற்றவர்களுக்கும், வசதி செய்வதற்காகத் தான் பிரகாரங்கள் ஏற்படுத்தி, பலமுறை சுற்றிவர வேண்டும் என்ற முறை ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். நோக்கம் நல்லது தான். ஆனால் அதை பார் ஆனுஷ்டிக்கிறார்கள்? கோயிலுக்குப் போகிறவர்கள் என்னவோ பெயருக்கு ஒரு தரம் வெளிப்பிரகாரத்தையும், மூன்று முறை பிரகாரத்தையும் சுற்றுகிறார்கள், இதில் என்ன தேகசுகம் வந்து விடப்போகிறது?