சொரூபதி அனுபூதி
சோறு
சொருபதி அனுபூதி - பதியுடன் உயிர் ஒன்றித்து நிற்கும் நிலை.
சொருப இலக்கணம் - உண்மை இயல்பு, கன்மங்களோடு மாயை கூடும் பொழுது ஆனமாக களின் அறிவை ஆணவம் முழு மையாக மறைத்து, அறியாமை யில் மூழ்கச் செய்யும். அதுவே, அதன் உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம்
சொல் இறந்தோய் - மெய்கண் டார் சொல்லைச் செறிவாக மாற்றுச் சொல் இல்லாத வாறு பயன்படுத்தியவர். எ-டு சொல்லே சொல்லுக சொல் இறந்தாயே (இஇ12).
சொல் தொழும்பு - சொல் தொகுதி..
சொல்லின் அண்மை - சொற்கள் அடுத்து நிற்றல்
சொல்லுலகம் - சப்த பிரபஞ்சம். இது மந்திரம் (11) பதம் (81), வன்னம் (51) என மூன்றாய்' இருப்பது. வன்னம் - எழுத்து பா. உலகம்.
சொற்கோ - திருநாவுக்கரசர்
சொற்பொருள் பின்வருநிலையணி- முன்னர் வந்த சொல் லும் பொருளும் பின்னர் வரு தல், சிவஞானபோத வெண்பா 5. இதில் ஒன்று அலா என்னும் தொடர் உருவம் அருவம் என்னும் பொருளில் திரும்பத் திரும்ப மூன்று தடவைகள் வருதல்.
சொன்மடந்தை - நாமகள்.
சோகம் - கூம்புதல், வாடுதல், சோகம் = பாவனை-சோகம் நீங்கியோர். 'அவனே நான்.' என்று பாவிப்பது.
சோடச சைவம் - பா சைவம்
சோடச் உபசாரம் - பா உபசாரம்.
சோதகம் - ஏவுவது
சோத்திரம் - செவி
சோத்திராதி - ஐம்பொறிகள்
சோதி - சுடர், செம்பற்சோதி
சோதி ஒரு முன்று - அக்கினி மண்டலம், ஆதித்த மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய முச்சுடர்கள்.
சோதிட்டோமம் - ஒரு யாகம்,
சோதிடம் - கோள்கள் மனித வாழ்வின் நன்மைக்கும் தீமைக்கும் எவ்வாறு காரணமாக உள்ளன என்பதை ஆராயும் நூல். வான நூலுக்கு வித்திட்ட துறை.
சோபான முறை - படிமுறை.
சோம சித்தாந்தம் - சைவ சமய உட்பிரிவுகளில் ஒன்று.
சோம்பு - விருப்பு வெறுப்பற்ற.
சோமாசிமாற நாயனார் - மறையவர் திரு அம்பர் - சோழ நாடு. சுந்தரரின் நண்பர். சிவனடியா ருக்குத் தன் அன்பை அமுதாக் கியவர். திருவைந்தெழுத்தைத் தவறாது ஓதியவர். குரு வழிபாடு (63)
சோம பானம் - சோம வேள்வியில் சோமச் சாறு பருகுதல்,
சோமயாகம் - ஒருவகை யாகம். தேவர் பொருட்டுச் கோமச் சாறு அளிக்கும் வேள்வி.
சோம்புதல் - சோம்பல் கொள் ளல்,
சோறு - வீடுபேறு. எ-டு பாதகமே சோறுபற்றினவா தோணோக் கம் (திருவாசகம் 15-7)
138