பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொரூபதி அனுபூதி

சோறு


சொருபதி அனுபூதி - பதியுடன் உயிர் ஒன்றித்து நிற்கும் நிலை.

சொருப இலக்கணம் - உண்மை இயல்பு, கன்மங்களோடு மாயை கூடும் பொழுது ஆனமாக களின் அறிவை ஆணவம் முழு மையாக மறைத்து, அறியாமை யில் மூழ்கச் செய்யும். அதுவே, அதன் உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம்

சொல் இறந்தோய் - மெய்கண் டார் சொல்லைச் செறிவாக மாற்றுச் சொல் இல்லாத வாறு பயன்படுத்தியவர். எ-டு சொல்லே சொல்லுக சொல் இறந்தாயே (இஇ12).

சொல் தொழும்பு - சொல் தொகுதி..

சொல்லின் அண்மை - சொற்கள் அடுத்து நிற்றல்

சொல்லுலகம் - சப்த பிரபஞ்சம். இது மந்திரம் (11) பதம் (81), வன்னம் (51) என மூன்றாய்' இருப்பது. வன்னம் - எழுத்து பா. உலகம்.

சொற்கோ - திருநாவுக்கரசர்

சொற்பொருள் பின்வருநிலையணி- முன்னர் வந்த சொல் லும் பொருளும் பின்னர் வரு தல், சிவஞானபோத வெண்பா 5. இதில் ஒன்று அலா என்னும் தொடர் உருவம் அருவம் என்னும் பொருளில் திரும்பத் திரும்ப மூன்று தடவைகள் வருதல்.

சொன்மடந்தை - நாமகள்.

சோ

சோகம் - கூம்புதல், வாடுதல், சோகம் = பாவனை-சோகம் நீங்கியோர். 'அவனே நான்.' என்று பாவிப்பது.

சோடச சைவம் - பா சைவம்

சோடச் உபசாரம் - பா உபசாரம்.

சோதகம் - ஏவுவது

சோத்திரம் - செவி

சோத்திராதி - ஐம்பொறிகள்

சோதி - சுடர், செம்பற்சோதி

சோதி ஒரு முன்று - அக்கினி மண்டலம், ஆதித்த மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய முச்சுடர்கள்.

சோதிட்டோமம் - ஒரு யாகம்,

சோதிடம் - கோள்கள் மனித வாழ்வின் நன்மைக்கும் தீமைக்கும் எவ்வாறு காரணமாக உள்ளன என்பதை ஆராயும் நூல். வான நூலுக்கு வித்திட்ட துறை.

சோபான முறை - படிமுறை.

சோம சித்தாந்தம் - சைவ சமய உட்பிரிவுகளில் ஒன்று.

சோம்பு - விருப்பு வெறுப்பற்ற.

சோமாசிமாற நாயனார் - மறையவர் திரு அம்பர் - சோழ நாடு. சுந்தரரின் நண்பர். சிவனடியா ருக்குத் தன் அன்பை அமுதாக் கியவர். திருவைந்தெழுத்தைத் தவறாது ஓதியவர். குரு வழிபாடு (63)

சோம பானம் - சோம வேள்வியில் சோமச் சாறு பருகுதல்,

சோமயாகம் - ஒருவகை யாகம். தேவர் பொருட்டுச் கோமச் சாறு அளிக்கும் வேள்வி.

சோம்புதல் - சோம்பல் கொள் ளல்,

சோறு - வீடுபேறு. எ-டு பாதகமே சோறுபற்றினவா தோணோக் கம் (திருவாசகம் 15-7)

138