மூவகைத் திருமேனிகள்
மூன்று வகை உணர்நிலை
மூவகைத் திருமேனிகள்- பா. திருமேனிகள்.
மூவகைப் பிரபஞ்சம்- சுத்தப் பிரபஞ்சம் மிச்சிரப் பிரபஞ்சம், அசுத்தப் பிரபஞ்சம் மிகச்சிரம், சுத்தம் அசுத்தம் ஆகிய இரண்டின் கலப்பு.
மூவகைப் புறச் சமயம் - புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப் புறச் சமயம்.
மூவகைவழி- 1) மெய்யறிவு நூல் ஓதுதல் 2) திருத்தொண்டு புரிதல் 3) சிவப்பணி செய்தல்.
மூவர்- சமயக்குரவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்னும் மூவர்.
மூவர் தமிழ் - மூவர் பாடிய தேவாரம்
மூவர் முதலிகள்- பாமூவர்.
மூவா முதல் - கடவுள்.
மூவினை அதிகரணம்- சிவஞான போத முதல் நூற்பாவின் முதல் அதிகரணம்: அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் இதில் உலகம் மூவினை உடைத்தாதல் தடை விடைகளால் நிறுவப்படுவதால், இது மூவினை அதிகரணம் என்று பெயர் பெறுவதாயிற்று.
மூவினை(மை)- தோற்றம், இருப்பு, ஒடுக்கம். இவை மூவினைமையின் ஒடுக்கம். (சிபோ நூபா 1) ஒ.இருவினை
மூளுதல் - தாக்குதல்.
மூற்கை- மயக்கம்.
மூன்றாய தன்மை- காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் என்னும் மூன்று தன்மை.
மூன்று - உள் பொருள்களான உயிர் உறுப்பு முதலியவை மும்மூன்றாக உரிய அடிப்படையில் பிரிக்கப்படுதல். எ-டு முக்குணம், முக்குற்றம்.
மூன்று அவத்தை - காரண அவத்தை; கேவலம், சகலம், சுத்தம் ஒ. காரிய அவத்தை.
மூன்று உறுப்பு வணக்கம் - திரியங்க நமக்காரம். தலை மேல் இருகைகூப்பி வணங்குதல். பா. வணக்கம்.
மூன்று ஏதுக்கள் - "உலகம் தோன்றி அழியும்" என்பதற்குக் கூறப்படும் மூன்று காரணங்கள். அவையாவன: 1) அவயப் பகுப்புடைமை 2) சமமாயும் பலவகையாகவும் இருத்தல் 3) சுட்டியுணரப்படுதல். இம்மூன்றாலும் உலகம் தோற்றல், நிற்றல், அழிதல் ஆகிய முத்தொழில்களைக் கொண்டிருப்பது நிறுவப்படுவதால், அதனையே ஏதுவாகக் கொண்டு உலகம் உள்பொருள் ஆதல் நிறுவப்படுகிறது.
மூன்று குற்றம்- பா.முக்குற்றம்.
மூன்று திறம்- தொழில், அறிவு, விழைவாற்றல் ஆகிய மூன்று.
மூன்று பாசங்கள்- திரோதனம், வினை, மாயை ஆகிய மூன்று.
மூன்று வகை உணர்நிலை- 1) இறைவன் இல்லை;நான் மட்டும் உள்ளேன் 2) இறைவன் உள்ளான்; நான் நானும் உள்ளேன் 3) இறைவன் உள்ளான்; நான் இல்லை, இவற்றில் முதல் இரண்டில் தற்போதம் ஒழியாது. இறுதி ஒன்றில் தற்போதம் ஒழியும்.
224