முத்தம்
1
‘தென்னம்பாளை பிளந்து, சிந்திடும் சிரிப்புக்காரி’ பத்மா புன்னகை பூத்தப்படி, சொன்னாள் ‘அதெல்லாம் என்னிடம் நடக்காதடியம்மா! என் கிட்டே நடக்காது, தெரியுமா?’ என்று.
‘நீ என்ன பெரிய சிங்கியோ?’ என்று குறும்பாகச் சொன்னாள் காந்திமதி.
‘பத்மா, நீ ஸர்க்கஸ்வாலி என்று பெயர் வைத்துக் கொண்டு, சிங்கங்களை அடக்கும் பயிற்சியில் ஈடுபடலாம். ஜானகி வாத்தியாரம்மா. தேவகி டாக்டரம்மா. காந்திமதி. என்னவோ ஆகப் போகிறாளாமே!’ என்று இழுத்து, பேச்சுக்கேற்ப நாட்டியமாடி நெளிந்து நின்றாள் பச்சை மயில் போன்ற புஷ்பா.
ஜானகி கலகலச் சிரிப்போடு கத்தினாள்: ‘தெரியாதா? ஒரு சினிமாப் படத்திலே வந்துதே—‘மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப் பெண்ணாகணும்’னு. அது மாதிரி!……’
‘போடி!’ என்று பொய்க் கோபம் காட்டினாள் காந்திமதி.
‘நம்ம கோஷ்டியிலே சினிமா ஸ்டார் ஆக வேணும்னு யாரும் ஆசைப்படலே போலிருக்கு. ஏண்டி புஷ்பா! அந்தக் குறையிருப்பானேன்? நீ வந்து’……