பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

கோயில்களில் பூஜை செய்யும் புரோகிதர்கள், திருவமுது தயாரிக்கும் மடப்பள்ளி ஐயர்கள் விஷயம் எல்லாவற்றுக்கும் மேல்! ஸ்நானம் செய்து விட்டு சுத்தமாக சந்திதியில் பிரவேசிக்க வேண்டும் என்பது விதிதான். ஆனால் அமுலில் இருக்க வேணும் என்ற அவசியம் கிடையாது! புரோகிதர்களைப் பார்த்தாலே இது புரியும்! மடப்பள்ளி ஐயர்களின் கதை சொல்லும் இது பற்றி!

பெரும்பாலான 'பட்டர்கள்' ஸ்நானம் செய்ததாக பாவலாப் பண்ணுவதில் கைகாரர்கள். உடம்பிலே பட்டை பட்டையாக விபூதி - அல்லது நாமம் - இலங்க வந்து விடுவார்கள்! அது போதும் மற்றப்படி அவர்கள் எங்கெங்கு போயிருந்தால் என்ன, எங்கே விழுந்து கிடந்து விட்டு எழுந்து வந்திருந்தால் தான் என்ன! தங்கள் காதலியின் அணைப்பிலே கிடந்திருந்தாலும், எழுந்து சும்மா உடம்பை லேசாக அலம்பித் துடைத்து விட்டு, பட்டை நாமத்தை (அல்லது விபூதியை) பரக்கத் தீட்டி, முனங்கிக் கொண்டே வந்தால் போதாதா! தாசன், தாசானுதாசன்' என்று புலம்பினாலே போதுமே!

புரோகிதவர்க்கம் தயாரித்துப் பரிமாறுகிற நைவேத்தியங்களின் வண்டவாளங்களை உணர்பவர்கள் அவற்றை வாங்கி உண்ணமாட்டார்கள்! பஞ்சாமிர்தம் தயாரிப்பது, பொங்கல், தயிர் சாதங்களை வேண்டிய தளிகைகளுடன் பிசைவது போன்ற காரியங்களை பெரிய அளவிலும் துரிதமாகவும் செய்ய வேண்டியிருப்பதால் பல கோயில்களில், அவற்றை ஐயர்கள் கால்களால் மிதித்துத் துவைத்துச் சமைக்கிறவை தான் புண்ணிய பிரசாதங்களாக பயபக்தியுடன் வாங்கப்பட்டு பிரமாதப்படுகின்றன, இச் செயலை எண்ணும் போதே உள்ளம் குமுறுகிறது.