இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19
இப்படியெல்லாம் அற்புதங்கள் செய்ய வல்ல வர் சிவன் என்பதை சினிமாக் கலை நிபுணர்கள் பிரத்தியேக ஞானதிருஷ்டி மூலம் கண்டு அருள் புரி கிறார்களோ என்னவோ. அதற்காக அவர்களைப் பாராட்டாவிடிலும் கூட, சிவனார் உருவிலே வந்து ஆடும்படி சில பெண் களை நிர்ப்பந்திக்காமல் சிவனை ஆணாகவே திரிய விட் டிருக்கிறார்களே அதற்காகப் பாராட்டலாம். ஆணாகிப் பெண்ணாய் அலியுமாகி அருள் புரி கிறவன் அப்பன் பரமசிவன் என்று மனமுருகிப் பாடிவைத்திருக்கிறாரே ஒரு பக்தர்; நாமும் அவரை அப்படி வைப்போமே என்று இதுவரை படமுதலாளி, கள் எண்ணாமலிருப்பதற்காக பரமசிவ பக்தர்கள் மகிழ்வடையலாம் அல்லவா !
சிறுமைகளைக் கண்டு சீறுகின்ற கோரநாதன்
கொதிப்புற்றுக் கூறுகிறார்
கொடு கல்தா!
யாருக்கு ? எதற்காக ! புதிய புத்தகம் பதில் சொல்லும் -
வெளியிடுவோர்
எ ரி ம லை ப் பதிப் பகம் துறையூர் : : திருச்சி Dt