குலோத்துங்க சோழனுலா

விக்கிமூலம் இலிருந்து


தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் 1

மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற் 2

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர் ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத் 3

துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர் எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் 4

அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில் ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை 5

எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் 6

போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர் மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் 7

வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப் 8

பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண் டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி 9

மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன் தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா 10

மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக் கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் 11

பதுமக் கடவுள் படைப்படையக் காத்த முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க 12

வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய 13

மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் 14

றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத் 15

தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக் 16

கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத் துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு 17

மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள் கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள் 18

பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு 19

படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச் 20

சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும் ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப் 21

பிரம வரக்க னகலம் பிளந்து பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் 22

தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் 23

ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக் 24

கங்கா நதியுங் கடாரமுங் கைவரச் சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் 25

புவிராச ராசர் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர் 26

போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள் ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார் 27

விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் 28

கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை 29

இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில் வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை 30

மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன் கனகளபன் - யாதினும் 31

தீட்டக் கரிய திருவே திருமாலை சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு 32

முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம் சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு 33

மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும் பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் 34

தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில் 35

ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண் தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க 36

புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும் அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் 37

தில்லையிற் செய்த திருப்பணிகள்

ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக் கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற் 38

றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் 39

றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல் அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன் 40

அலகை யிகந்த அசலகுல வச்ரப் பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக் 41

காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் 42

தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண் டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய 43

தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய 44

பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால் திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க 45

நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான் 46

ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப் 47

பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள் 48

நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க மலையேழு மென்ன வகுத்துத் - தலையில் 49

மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச் சிகரங்க ளாகித் திகழ - நிகரில் 50

எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும் விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற் 51

கடாரப் பனிநீர் கவினிக் கனபொற் றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் 52

றற்பக லாக வனந்த சதகோடி கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண் 53

வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த சுரமகளி ராகித் துறும - ஒருதான் 54

பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம் மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும் 55

இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள் திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர் 56

புனையா மணியாலும் பொன்னாலு மின்ன மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் 57

திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 58

பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும் கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் 59

புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம் பவனி யெழுச்சி பணித்துக் -கவினும் 60

மடமயி லொக்க மகுடங் கவித்தாள் உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் 61

அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 62

வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத் தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் 63

கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும் 64

உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத் திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப் 65

பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற் கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர 66

வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத் திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற் 67

கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள் பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல் 68

வந்த வனச மகளேபோன் மற்றது தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச் 69

சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த உரக பணாமணி யொப்ப - விரவி 70

மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச் சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில் 71

முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில் வடியு நிலவு மலையப் - படியில் 72

வயங்கு கடக மகுடாதி மின்னத் தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய 73

செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம் வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 74

நாவியு மான்மதச் சாந்து நறையகில் ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய 75

தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக் கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை 76

வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப் போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் 77

மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும் வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட் 78

கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும் வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா 79

முதுவாய் வடவையு முந்நான்கு கோளும் கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய் 80

அபயங் கொடுக்கு மயிரா பதத்தை உபய வயக்கோட் டுருமை - விபவ 81

நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற் றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க 82

பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய 83

ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக் 84

கவரி யிரட்டக் கடவுண் முரசார்த் துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் .85

சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும் எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து 86

விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப் பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின் 87

மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச் சிலையான் வரவு தெரியத் - தொலையாது 88

வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால் வாசவன் வந்த வரவறியக் - கூசாதே 89

யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் 90

பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத் தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப் 91

பரவி யுலகிற் பலமண்ட லீகர் புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் 92

விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம் எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி 93

இரவிக்கு நிற்பன வேழு மொழியப் புரவிக் குலமுழுதும் போத - விரவி 94

உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 95

எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம் விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய 96

விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம் மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய 97

மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர் பூகத ராயினார் போற்பரவ - நாகர் 98

கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத் தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள 99

கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 100

சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் 101

தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர் நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் 102

மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார் சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும் 103

இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத் திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட 104

கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும் பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு 105

நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன் இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் 106

மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக் காகாள மென்னும் படிகலிப்பப் - போகத் 107

தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ் மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் 108

சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர் சேனா பராக மெனத்திகழப் - பூநாறும் 109

கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய் வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் 110

இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன் மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 111

முதுகுல மன்னர் முடிவணங்க வந்த விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் 112

கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர் எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் 113

தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும் யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய 114

மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும் தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை 115

ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் 116

சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் 117

துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில் நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே 118

வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக் கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி 119

முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற் பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் 120

பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் 121

உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் 122

பேதை[தொகு]

இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற் புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர் 123

ஆடாத தோகை யலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் 124

தளிராத சூதந் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி - அளிகள் 125

இயங்காத தண்கா விறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க் 126

கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம் ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும் 127

நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம் 128

தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார் 129

வணங்க வணங்கி வழுத்த வழுத்தி அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் 130

மன்னன் புனையுந் திருமுத்த மாலையை அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் 131

கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும் பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை 132

அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி 133

தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப் 134

பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத் 135

தற்புத வல்லி யவளே பிறந்துடைய கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர் 136

பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி 137

போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன் 138

ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 139

இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும் அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 140

முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும் கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் 141

சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து 142

விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம் கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா 143

வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென் றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை 144

கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச் சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி 145

இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் 146

பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக் கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் 147

சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக் 148

கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர் ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய் 149

காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய 150

பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந் 151

தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் 152

செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் 153

கூறு மவையிவை யென்று குறுந்தொடி வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் 154

ஒருத னடியின் மடிய வுபய மருது பொருது வயவன் - விருதன் 155

விலையி லமுத மதன விமலை முலையின் முழுகு முருகன் - வலைய 156

கனக சயில வெயிலி கணவன் அனக னதுல னமலன் - தினகரன் 157

வாசவன் றென்னன் வருண னளநேசன் கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 158

ஆழிப் பெருமா னபய னனபாயன் சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது 159

சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் 160

கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி ஓடு நகாதே யுடையாதே - பீடுற 161

வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த் 162

தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் 163

சூதள வல்ல துணைமுலை தூயகண் காதள வல்ல கடந்தனபோய் - மாதர் 164

உருவத் தளவன் றொளியோக்க மாக்கம் பருவத் தளவன்று பாவம் - தெருவத் 165

துடைவ துடையாதா முள்ள முறவோர்ந் தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து 166

சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன் தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும் 167

ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன் காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந் 168

தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன் காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் 169

எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் 170

மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும் செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் 171

வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக் கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை 172

ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும் வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் 173

நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன் புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய 174

பல்லிய மன்று பரராச கேசரி வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய 175

கல்லார மன்று கதிரோன் றிருமருமான் மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 176

அருத்தி யறிவா ரவையிவை யென்று திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி 177

மங்கை[தொகு]

உருவ வரிக்க ணொழுக வொழுகப் புருவ முடன்போதப் போத - வெருவி 178

வனமுலை விம்மி வளர வளரப் புனைதோள் புடைபோதப் போத - வினைவர் 179

அருங்கலை யல்கு லகல வகல மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 180

பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை வரவர வாற்றாத மங்கை - பொரவரு 181

தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் 182

அமுத மதியத் தலர்நிலா முற்றும் குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 183

கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் 184

தண்டா மரையா டலைவனை யாமும்போய் கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 185

ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும் தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் 186

வாவிக் கரையில் வரநீ ரரமகளிர் சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 187

புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத் தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே 188

னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய 189

முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங் கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய 190

பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ் கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் 191

உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில் வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 192

மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன் கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர் 193

நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க நீலமே யன்றி நினையாதாள் - நீலமே 194

முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம் தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர் 195

நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும் ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே 196

இறங்கிய கற்பக வல்லியு மேறி உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க 197

வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண் டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் 198

கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் 199

காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும் தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் 200

வௌியே தருவேன் விரையாரத் தொங்கல் கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ 201

தாது கடிகமழ் தாதகித் தாமத்தின் போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே 202

எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் 203

சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான் சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் 204

கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின் மடமானே தானே வருங்காண் - கடிதென்று 205

கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன் பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள 206

அலகில் குலநீல ரத்னா பரணம் விலகி வெயிலை விலக்க - உலகிற் 207

பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208

ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும் நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் 209

மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே மின்னனை யாளையு மீதூரா -முன்னர் 210

கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும் இடமாதும் யாமென்பார் போலப் - படமாய் 211

இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம் நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் 212

முலையாய் வளரு முரட்குவடு கொண்டு மலையாய் நெருங்க வருவார் - தொலையாத 213

பாய பருமுத்தின் மாலை பலதூக்கித் தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற் 214

கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும் பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 215

யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார் தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத் 216

தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும் பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் 217

நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள் 218

தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் 219

இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும் நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று 220

மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத் தானூங் களிறுந் தடையுண்ட - கோனும் 221

தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த 222

திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும் ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை 223

எய்தி யனங்க னெழப்போனான் மாதரும் உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற் 224

றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் 225

துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம் புகிலும் புகாமே பொராமே - அகினாறும் 226

பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய் வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை 227

மடந்தை[தொகு]

பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர் முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் 228

வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந் 229

தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும் தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் 230

கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் 231

எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் 232

அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் 233

ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப் போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் 234

சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும் உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும் 235

கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும் அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி 236

அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை மறுகு திருமலர வந்தான் - குறுகும் 237

முறுகு கதிரின் முகந்திரிய வேற்று மறுகு திருமலர வந்தான் - குறுகும் 238

நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட் குடையாய வெள்ளமுங் கூடி - அடைய 239

மதியுதய மென்று வணங்க வனச பதியுதய மென்று பணிய - துதியில் 240

ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும் இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில் 241

நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய 242

பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற் போய மருங்குற் புறநோக்கார் -சாயா 243

முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள் நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால் 244

உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின் கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும் 245

பருவக் கொடிவதன பங்கே ருகத்தின் புருவக் கொடி முடியப் போகா - உருவக் 246

களிக்கும் புடவி சதகோடி கற்பம் அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் 247

கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக் கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா 248

முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற் புகுந்த திதுவென்று போனான் - திகந்த 249

முழுதா ளபயனை முகிணகையுந் தோளும் தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் 250

திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும் சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் 251

முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ் கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே 252

ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத் தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம் 253

கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து 254

துளவ முகிற்கிது வந்தது தூய வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த 255

வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல் புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் 256

இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக் கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின் 257

வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும் 258

பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக் 259

செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே 260

தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும் பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் 261

பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய் மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262

அரிவை[தொகு]

தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத் தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை 263

வளவர் பெருமான் வரும்பவனி யென்று கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத் 264

தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன் பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா 265

என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும் நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் 266

அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம் எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன் 267

மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன் 268

சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று காமித் திகழின் கடைதிறப்ப - நேமி 269

மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித் தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் 270

வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில் இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக் 271

கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம் நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக் 272

களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும் கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப் 273

பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை 274

அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப் 275

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர் 276

தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில் தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் 277

போல விழுந்து மெழுந்தும் புடையாயம் கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் 278

எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக் கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும் 279

மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் 280

வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல் எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து 281

வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம் சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய 282

பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் 283

புறவுஞ் சகோரமும் பூவையு மானும் பிறவு மினமென்று பெட்ப - உறவாய் 284

அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம் தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் 285

மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே 286

அலகு முகமுங் குவிகையு மாகி மலரு முகளமுமானப் - பலர்காணத் 287

தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் 288

தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் 289

ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் 290

சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம் நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் 291

அரிவை துகினெகிழ வல்கு லரவின் உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் 292

மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப் பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும் 293

ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல் மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய 294

வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த 295

பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும் ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் 296

அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள் இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற் 297

பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர் பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப் 298

பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர் கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை 299

என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப் 300

தெரிவை[தொகு]

பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்

இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப் 301

போதும் பெருமாள் புகுது மளவுமிங்

கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் 302

பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று

வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் 303

கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே

அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே 304

கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்

கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி 305

எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்

கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து 306

முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்

கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் 307

அடியு மிருகையு மம்புய மென்று

படியு மொழுங்கிற் பயில -முடியும் 308

தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க்

கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய 309

விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்

எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால் 310

ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை

ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும் 311

கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை

ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ 312

திலக நுதலிற் றிருவேயென் றோதி

உலகு வியப்பவென் றோத - அலகிறந்த 313

பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட

வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை 314

பெருமா னனபாயன் பேரிய மூன்றும்

தருமா வாரந் தழந்த - ஒருமாதர் 315

ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ

போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் 316

தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப்

போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச் 317

சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்

பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர் 318

ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்

மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத் 319

தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்

இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் 320

உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு

பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம் 321

அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை

விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க் 322

கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி

ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் 323

இழியு மொருசாம ரேகையு முந்திச்

சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய 324

இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்

திசையின் புடையடையச் செல்ல - மிசையே 325

பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ

சுறையு மரகத மொப்ப - அறையும் 326

சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்

உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல 327

தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று

பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே 328

ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்

தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் 329

கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய

வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி 330

இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க

ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் 331

மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு

சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் 332

ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக்

கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள 333

நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்

வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி 334

முருகு கமழ முகந்து முகந்து

பருகு மடமகளைப் பாரா - அருகு 335

மடுத்து முயங்கி மயங்கிய தாயர்

எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் 336

நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்

நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத 337

தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்

துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப் 338

பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்

கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி 339

அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று

தெளிப்பச் சிறிதே தெளிந்தாள் - கிளிக்கிளவி 340

பேரிளம்பெண்[தொகு]

மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே

செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் 341

தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை

மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு 342

மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்

தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண் 343

டேந்தி முகம னியம்பி யிருந்தொரு

காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி 344

குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும்

விதலை யுலகில் விளைத்து - நுதலை 345

வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை

அயரா வெளிவிடா வஞ்சாப்- பெயரா 346

அருகிருந்த பாணனை நோக்க அவனும்

குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக் 347

காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும்

கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன் 348

குரகத மேழு முழுகிக் குளிப்ப

மரகத சோதி வயங்கப் - புருவ 349

இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப்

புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக 350

ஏக முருக்கு மலர விளம்பாளைப்

பூக மிடறு வரப்பொதிய - போகப் 351

பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்

பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய 352

நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்

குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து 353

சலித்துத் தனியிள வஞ்சி தளரக்

கலித்துக் கதலி கவின - ஒலித்தே 354

அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்

களிக்கு மயூர கணமும் - விளிக்கும் 355

புறவுந் தொடர்ந்துடனே போத வவையே

பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் 356

காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்

சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் 357

தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக்

கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல் 358

வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்

பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் 359

செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய

பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் 360

உய்ய விருகாது மூக்கு முடுபதியை

நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய 361

பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்

கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக் 362

சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப்

பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின் 363

சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்

அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் 364

ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்

வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி 365

முடைதழுவு தோளும் முலையுந் தழுவ

விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக் 366

கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை

மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் 367

ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்

கால வுததி கலக்கவும் - சால 368

வருந்தா வகைவருந்த வாழி பெயரும்

பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய 369

குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால்

வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக் 370

கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த

ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய 371

சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய

மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் 372

முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்

அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி 373

மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்

அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர் 374

தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்

றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த் 375

தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்

எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் 376

செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்

வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக் 377

காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்

வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் 378

வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த

மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் 379

சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்

சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ் 380

அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப

வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா 381

உடல்பிள வோட வொருதேரிடட் டூரும்

அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் 382

அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்

இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல 383

வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த

கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் 384

எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று

மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே 385

தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா

மையலார் போலராய் மன்றேற - வையம் 386

பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்

ஒருகுடையான் போந்த னுலா. 387

குலோத்துங் சோழனுலா முற்றிற்று

வெண்பா[தொகு]

என்றினி மீள்வ தரிதி னிரணியனை

அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே

ஆவின்பின் போன வனக னனபாயன்

மாவின்பின் போன மனம்

கட்டளைக் கலித்துறை[தொகு]

ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்

நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்

பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்

சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=குலோத்துங்க_சோழனுலா&oldid=11788" இலிருந்து மீள்விக்கப்பட்டது