பக்கம்:புலவராற்றுப்படை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 75 80 90 கூண்டினி தொழுகுங் குறையின் மறுகுதொறுங் கூடம் போன்ற கோபுர நிரையொடு மாடஞ் சான்ற மதுரைமா நகர்க்கண் முந்திய சங்க மூன்றொன் றாகிப் பிந்திய சங்கம் பிறந்த தாலெனத் தண்டமிழ் விரிக்கும் பண்டைநூ லெழும்ப வியனனி விழைகுநர் குழீஇனர் பயில மால்செய் கல்லியர் மாண்பி னூல்செய வுரைகாண் வல்லுநர் வரைகாண் டெழுத முறைபிறழ்ந் துற்ற குறைபல் காண்மார் முது நூ றேண்டிப் பழுதாய்ந் தமைக்கக் குற்றம் போகிய கற்றன கெடா அப் பேனூஉ வைகுமோர்ப் பரிக்கை காணு உச் சிறப்புப் பெயரொடு பரிசிலு மளிப்பப் பின்னும் வேண்டுவ வென்னவும் புரிய மங்கலி லருந்தமிழ்ச் சங்கமொன் றிரீ இனன் குமரிமருங் குற்ற நிமிர்திரை முரியுஞ் சேது காவலர் திறற்குடிப் பிறந்தோன் றீதுதீர் வாழ்க்கைத் தென்புலங் காப்போன் மறங்காண் பகைவர் வணங்கிய புறங்காண் மஞ்சுவரு மேற்றி னஞ்சுவரு திறலினன் புலவர் வம்மின் பொருநர் வம்மின் பலர்புகழ் கூத்தரும் பாணரும் வம்மின் போராக் கதவதிப் புரவலன் வாயிலென வேரார் வான் கொடி நுடங்குபு நுடங்கி யகவையம் மாடத்து முகவை யூரன் மேலறி வுயர்ந்த நூலறி புலவன் முத்தம் விளைவயற் பாலவ னத்த நாடு செகிற் கொண்டு பீடுகெழு குடிதழீஇ முற்றக் காக்குங் கொற்றக் குடையினன் விரைகமழ் கண்ணியன் பாண்டித் துரையெனக் கேட்டனெ னன்றே கெட்டதென் கவற்சி வேட்டன வடைதல் விளிவுறா தாலெனக் கதுமென வெழுஉச் சினைகொள் புதுமலர் வண்டுந் தேனு முண்டன களிப்ப நறவிருந் தளிக்கும் புறவுறழ் சோலை 'வளனற வறியா மல்வலம் முதுநகர் மாண்புறப் புகூஉக் காண்பன கண்டு செந்தமிழ் விளங்குமச் சங்கம் போஒய் நல்லிசைப் புலவர் சொல்லிசை பரப்பக் 95 100 105

13'

13