பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உறிவுசால் தந்தை தாயோ
உற்றிடும் மக்கள் தாமோ
ஒருவரும் காக்க மாட்டார்
உயிரது பிரியும் வேளை
உறங்கிடும் போது வெள்ளம்
ஊர்முழு வதுமாய்த் தாற்போல்
ஒருவிடின் அறத்தை[1], சாவோ
ஒல்லையில் அடித்துச் செல்லும்.

74


21. பல்வகை இயல்

சிறியதாம் இன்பம் விட்டுச்
சிறந்தபே ரின்பம் நாடீர் !
உரியதைச்[2] செய்யாச் சோம்பும்
உரியதல் லாத ஒன்றைப்
பெரியதாய்ச் செயலும் வேண்டா !
பெற்றிடத் தன்ன லத்தை,
பிறரது நலங்கெ டாமல்
பேணுவீர் நேர்மைப் பாதை.

75


துறப்பதும் கடினம: ஒன்றும்
துறந்திடாத் துய்ப்பும்[3] அஃதே !
சிறப்பொடு, மனைய றத்தைச்
செய்வதும் அரிதே ! தீமை
மறப்பிலா மக்க ளோடு
மகிழ்வதும் இயலா ஒன்றே !
சிறப்புடன் உலகில் வாழ்தல்
செயற்கருஞ் செய்கை யாகும்.

76

26

  1. 73
  2. 74
  3. 75