பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்நின்ற முத்துநகைப்
     பவழ இதழ்ப்
பெண்என்ற சித்திரமே - உனைப்
     பேசுவதும் எப்படியோ?
கண் நின்று மனம்நில்லாக்
     காட்சியினைச்
சொல்நின்று பொருள்மலரச்
     சுவையாக்கிப்
பண்ஒன்றி இயைந்தொலிக்கப்
     பாட்டிலிசை
நின்றெழுகப் பாடுவதும்
    எப்படியோ
நின்னழகைப் பாடுவதும்
    எப்படியோ?”

ஆமாம்; உங்கட்குப் பழக்கமான பாடல்தான்!

59