இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிற் சேர்க்கை
(புத்தர் பல்வேறு வேளைகளில் பலர்க்குக் கூறியவை)
நம்முடைக் குறையைச் சொல்வோர்
நன்மையே செய்வோ ராவர்.
நம்முடைக் குறையை அன்னார்
நவின்றிடா ராயின், ஓர்ந்[1]தே
நம்முடைக் குறைகள் முற்றும்
நாமறிந் திடுதல் எங்ஙன்?
நம்மைநாம் திருத்த இங்ஙன்
நல்வழி செய்வோர் வாழ்க!
1
ஒருபொருள் நாம்பி றர்க்கே
உதவிடின், அவர்ம றுப்பின்
தருபொருள் நமையே மீண்டும்
சார்ந்திடும் தன்மை போல,
ஒருவரை நாமி கழ்ந்தால்
ஒப்பவே மாட்டார்; அந்த
வெருவரும்[2] இகழ்ச்சி நம்மை
விரைவிலே மீண்டும் சேரும்.
2
37