பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

என்பதை விளக்குவதே சிலப்பதிகாரம் இயற்றுவதன் சிறப்புடைக் காரணமாம் எனக் கூறியதோடு, இப் பிறவி யில், ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் முற்பிறவி யில் அவர் செய்த வினேப் பயன்களே காரணமாம் என வும் கூறிச் சென்றுள்ளார் :

  1. of ஊழ்வின உருத்து வந்து ஊட்டும் என்பது உம்

சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்." வி&ர விளகாலம் ஆதலின், யாவதும் - சினையலர் வேம்பன் தேராணுகிக் கன்றிய காவலர்க் கூஉய் அக்கள்வனேக் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன '

இம்மைச் செய்தன யானறி கல்வினை: உம்மைப் பயன்கெர்ல் ஒருதனி உழந்து இத் கிருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது '

சிலப்பதிகாரம், இவ்வாறு, சமண சமயக் கருத்துக் ಹಶಿ7 அடிப்படையாக் கொண்டு, அவற்றை விளக்கிச் செல் வதோடு அமையாது. அச்சமயக் கடவுளையும் காட்டி, அவரை வழிபடும் வணக்க நெறியினையும் உரைத்துளது. கெளந்தி அடிகள் என்ற அச்சமய மூதாட்டி ஒருவரை முன் னிருத்தி, அவர் வாயிலாக அருக வணக்கத்தை வரைந்து காட்டியுள்ளதும் உணர்க.


பெளத்த மதச் சார்புடைய ഥങ്ങ@ു, மாதவி மகள் Dಣಗಿ(3ಊಹಶಿಖ என்பாள், துறவறம் மேற்கொண்டு