பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னாட்டின் மேல் தனியாத வேட்கையுடைய அறமற்ற அயல் மன்னன் வலிபெருக்கித் தன்மேல்வருமுன்னமே தக்கபடை கொடு தான் சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அதுசெய்யாதனை எஞ்சாமண்ணசையுடையான் வஞ்சத்தால் வலிமிக வளர்த்து வாய்த்த போது வந்து தடிவன் ஆகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடைய யானை வென்றடக்கி ஆண்மைறம் ஆற்றுதல் போற்றத்தகும் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கமே பழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை அதனயே இச்சூத்திரம் விளங்குகின்றது.இளம்பூரணரும் அதுவே கருத்தாகக் கொண்டு இச்சூத்திரற்கு“ஓழிய மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை வேறோரு போர்க் வேந்தன் அஞ்சுத் தலைச் சென்று அடல் குறித்து” என நேரிய செம்பொருளை இனிது விளக்கியுள்ளார்.

அளவு கடந்த மண்ணாசையுடையளாய் பிறாது மண்ணைக்கவர்ந்து கொள்ளச் சோர்வுபார்த்திக்கும் பகைமன்னன் தன்மேற்படையெடுத்து வருவதற்குமுன்பே அவன் தடுக்கமுறும்படி அவனை வென்று நடக்குதற்கு ஏற்ற காலம்,இடம் வலி முதலியவற்றை எண்ணி அவனது நாட்டின்மேற் போர்க்கருவிப்படையுடன் மேற் சேரல் நாடன் வேந்தனது

கடமையதலால்,எஞ்சாமண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடுதலைக் குறித்தது வஞ்சித்திணை' என்றார் தொல்காப்பியனார்.எஞ்சா மண்ணாசை என்றது வேந்தன் ஒருவன்தனதுநாட்டின் எல்லையளவில் நில்லாமல் பிறவேந்தரது நிலத்தினைத் தானே கவர்ந்து கொள்ளக்கருதும் ஒழியாத பேரசியினை இவ்வாறு மேற் செலவுக்கு இலக்காகிய வேந்தனை,எஞ்சாமண் நசை வேந்தன் ஏன் அடைமொழிபுணர்த்தும் அவன்மர் படையெடுத்து செல்லும்வேந்தனை வேந்தன் ஏன் ஆடை மொழியின்றியும் தொல்காப்பியனார் கூறியது மண்ணாசயாளன் கொண்டுள்ள மண்ணாசை அவன்மேற் படையெடுத்துசெல்லும் வஞ்ச்சிவேந்தனது நிலத்தைக்குறித்தே என்பதையும் இவன் அவன்மேற் படைகொடு செல்லலுதலின் நோக்கம்அவன்தனதுநாட்டினை கைப்பற்றுதற்கு முன்னமே அவனது பேரசையே ஒழித்துதான்அவனை வென்றடக்குதல் வேண்டும் என

15