பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

31


வாராதார் ஆர்? பணிவிடைகள்
வரிசைப்படியே நடந்தாதார் ஆர்?

என்று கவிஞர் பழனிக் குழந்தைக் குமாரக் கடவுளை நோக்கிக் கேட்கிறார்; ஆர் ஆர் என்று கேட்பதானது, ஆரார் என இணைந்து, தாய்மார் தாலாட்டும்போது ஒலிக்கும் ஒலியாகிய ‘ஆராரோ ஆராரோ' என்ற ஒலியைத் தந்து, தாலாட்டு என்ற எண்ணத்தையும் உண்டுபண்ணுகிறது. இங்ஙனம் பாடும்போது, தாலாட்டு என்ற நினைவும் ஒரு பக்கம் கவிஞரைக் கவருகிறது. இந்த நினைவோடு பார்த்தால் பாட்டு முழுவதுமே ஓர் அழகிய தாலாட்டாயிருப்பதை நாமும் கண்டு அனுபவிக்கலாம்.

சீரார் நலஞ்சேர் பூவுலகில்
தேவாசுரரில் மற்றையரில்
தினமும் உனது கொலுக்காணச்
சொல்லாதாரார்? திறை வளங்கள்

தாரா தாரார்? உனழ பதம்
தனையே வணங்கித் தொழவேண்டித்
தழுவாதாரார்? எவ்வேளை
சமயங் கிடைக்கும் என நினைந்து

வாரா தாரார்? உனதருளை
வாழ்த்திப் புகழந்து துதிக்க மனம்
வசியா தாரார்? பணிவிடைகள்
வரிசைப் படியே நடத்தாதார்

ஆரார் எனத்தாலாட்டு கின்ற
அரசே வருக வருகவே
அருள்சேர் பழனிச் சிவகிரிவாழ்
ஐயா வருக வருகவே!