பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாரதிதாசன்


ஆட்டின மாயக்கூத் தென்ன அகத்துள்ளே
கூட்டெனை ஞானக்கூத்தாட்டிய வித்தகனோ!

செல்லல் அறுத்த சிவப்பிரகாசனோ
தொலைலை மறைதேர் சொருபானந் தச்சுடரோ!

3. கீதாசாரத் தாலாட்டு :-

(17ஆம் நூற்றாண்டு. 108 கண்ணிகள். மாதைத் திருவேங்கட நாதர் பாடியது. கீதையின் உட்பொருளைச் சாராமாகத் திரட்டிக் கூறுவது)

திருத்தேரிற் சாரதியாய்ச் சேர்ந்திருந்துங்

கீதையினால் அருச்சுனற்கு மெய்ஞ்ஞானம்
அனைத்தும் உரை

செய்தவரோ வல்லிரும்பு கனலுடனே மருவியது

போல்மனமும் ஒல்லையிலான் மாவுடனே
உற்றதுகாண்

என்றவரோ இந்திர சாலம் போல இவ்வுலகை

நம்மிடத்தில் தந்திரமாத் தோற்றுவித்தோம் சத்யமல

என்றவரோ கூறுமுல கியற்கையுடன்
கூடினுமெய்ஞ்

ஞானம்வரப் பொருந்தியதே சுகவடிவம்
புண்ணியரே கண்வளரீர்.