சீதைக்கு
ஒரு பொன்மான்!
ஒன்று:
ஆயிரம் முத்தங்கள்
ஆஹா!-சுந்தருக்குத்தான் எத்துணை ஆனந்தம்: வாய் கொள்ளாமல் சிரித்தான்; மனம் கொள்ளாமல் மகிழ்ந்தான். மகிழ்ச்சியும் சிரிப்பும் ஆனந்தக் கனவுகளாக ஆனந்த நடனம் புரிந்தன!
ஆஸ்பத்திரிச் சூழலின் நெடியைப் பொருட்படுத்தும் நேரம் அது அல்லதான்!
"உங்களை அப்படியே உரிச்சு வச்ச மாதிரி, குழந்தை பிறந்திருக்குதுங்க, அத்தான்; நான் சொல்றது சரிதானே?”
பெருமையும் பெருமிதமும் போட்டியிட்டன. 'பச்சை மண் மீது பதித்திருந்த பார்வையைத் திருப்பினுன் அவன்; கண்கள் சலனம் அடைந்தன; நலிவுற் றிருந்த பச்சை உடம்போடு, தலையணையில் சாய்திருந்த சுசீலாவை ஆறுதலாகப் பார்த்தான். 'வாஸ்தவம்தான், சுசி ஆண் குழந்தைன்ன, அது என்னைத்தானே கொண் டிருக்கும்?' என்ருன். இன்னுயிர்த் துணையின் பேசும் விழிகளைப் பேசாமல் ரசித்து அனுபவித்து எத்தனை யுகங்கள் ஆகிவிட்டன! அவன் பெருமூச்செறிந்தான்.