2. நேசமச்சான் யார்?
தண்ணிர்க் குடமெடுத்துக் தனி வழியே நடை. பயின் து கொண்டிருந்தாள் செவந்தி. அடி வைத் தாள்: வைத்த அடி பெயர்ந்தது; பாதை வளர்ந்தது. அதை யொப்ப, கன வுகளும் வளர்ந்தன. குடியிருப் பினின்றும் ஈசானிய மூலைக்கு மடங்கி, குண திசைக் குத் திரும்பினாள் அவள். காரை ச் செடிப்பத்தையின் ஒண்டலில் சுண்டும் பொழுது வரை நின்றாள். அவளை யும் அறியாமல், அவளது மனமெனும் முர சம் சதா ஒலியெழுப்பிக் கொண்டிருந்த தந்தையின் இதயமொழிகள் அவளுடைய நெஞ்சைக் குடைந்து, நினைவைச் சுண்டியிழுத்த வண்ணம் இருந்தன.
ரங்கோன் காரர் கேணி வந்தது.
‘வா செ வந் தி!’
- அக்காவா? சொ கமா ?”
“அத் தாச்சிப் பொண்ணா? எப்பைக்கு எங்க ளுக்கு விருந்து ச் சோறு போடப் போறிகளாம்? கண்ணாலத்துக்கு ஊர் வத்திலை பாக்கு எப்ப வைக் கப்போறா கண்ணு எங்க மாமன்காரரு நச்சரிச்சுக் கிட்டே இருக் காரே?”
“ஊம், செவந்தி ராணிக்கு எந்த ராசா வாய்க்கப் போகுதோ? எந்த ஊரு மம்முத னுக்கு முந்தானை போட லவிதம் எழுதிக்கிடக்குதோ, யாருக்குத் துப்பு தெரியுது? ...”*
- தங்கச்சி வீட்டு அழகுக்கு மாப்பிள்ளையை ப் பாக்கு வெத்தலை வச்சா அழைக்கோணும்? தன் னாலே ஒடி வர மாட்டார்களா? என்னா நான் சொல்தது அஞ்சலை?”