பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இவருடைய முதல் கதைத் தொகுதியைக் ‘கடல் முத்து’ என்னும் பெயரில் பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் 1951ல் வெளியிட்டார்கள். 1961ல் ஆனந்த விகடன் நிறுவனத்தார் இவருடைய ‘மகுடி’ என்னும் ஓரங்க நாடகத்திற்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டினர்.

பல பேட்டிக் கட்டுரைகளும், ஒன்றிரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தின் செழுமையான தாய்மையையும், தமிழ் மொழியின் கட்டுக் கோப்பையும் மதித்து அவற்றை ஒர் எழுத்தாளன் அடைய முயல்வது சிறந்தது. ஆனால் இந்த நாட்டில் இன்றைய சூழ்நிலையில் தமிழைச் செவ்வனே பயின்றிருக்கிறோம் என்று சொல்வதையே இழிவு என்று கருதுகிற அளவுக்கு ஓர் எண்ணத்தைப் பரப்பித், தங்கள் அறியாமையையும் பலகீனத்தையும் மூடி மறைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் போலி மறுமலர்ச்சிக் கும்பலை இந்நூலாசிரியர் பெரிதும் சாடியிருக்கிறார்.

இத்துணிவைப் பெரிதும் பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம். இவ்வரிசையில் இன்னும் சில நூல்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்கள் அவா.

தொல்காப்பியர் நூலகத்தார்