7. அன்னே இவையும் சிலவோ
அன்னே! இவையுஞ்
சிலவோ? பல அமரர் உன்ன ற் கரியான்
ஒருவன இருஞ் சீரான் சின்னங்கள் கேட்பச்
சிவன் என்றே வாய் திறப்பாய்! தென்னாஎன் னா முன்னம்
தீசேர் மெழுகொப்பாய் என்னானை என் அரையன்
இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய்
இன்னங் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல்
வாளா கிடத்தியால் என்னே துயிலின்
பரிசேலோர் எம்பாவாய்!
இதுகாறும் வாள் தடங்கண் மாதே’ என்றும் நேரி ழையாய்” என்றும், * முத்தன்ன வெண்ணகையாய்” என்றும், ஏலக் குழலி’ என்றும் மானே’ என்றும் பள்ளி விட்டெழாது நின்ற மகளிரைக் குறிப்பிட்ட-கூப்பிடும் நிலையை மேற்கொண்டுள்ள கன்னியர் இப்பொழுது உள்ளே உறங்குபவளைப் பார்த்து அன்னே என்று அன்பொழுக விளிக்கின்றனர். தாய் போன்றவளே. என்று அவளை விளிப்பதன் நோக்கம், இறைவனுக்கடுத்த நிலையிலே பெருமையுடனும் மதிப்புடனும் நடத்தப்பெற வேண்டியவள் தாயேயாதலின் அன்னே’ என அழைத்