தி:
$1.
செல்ல வல்லராத்ல் வேண்டும். என்பால் அன்பு கொண்டு, ஆங்குச் சென்று, என் காதலனைக் கண்டு, அன்ப! உன் காதலியைக் கண்டு களிக்க இது நேரம்; இப்போதே சென் ருல், அவளைக் காண்பதும், களிப்பதும் எளிதில் கிட்டும்; ஆகவே, இந்நிலையே ஆங்குச் செல்’ எனத் தூதுரைக்கவல் லார் துணை கிடைப்பின் எத்துணை நன்றாம் எனக் கூறிப் பெரு மூச்செறிந்தாள்.
‘சேயாறு சென்று, துனைபரி அசாவாது
உசாவுகர்ப் பெறினே, கன்றுமன், தில்ல; வயச்சுரு எறிந்த புண் தணிந்து, எந்தையும் ல்ேகிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்நெல் தரீஇய - உப்புவிளை கழனிச் சென்றனள்; அதனல் பனிஇரும் பரப்பின் சேர்ப்பற்கு இனிவரின் எளியள்’ என்னும் துளதே.”
அவன் எவ்வாறு வருந்தினனே?
அவர் காதலை ஒருவரும் அறியாதவாறு காப்பதில், தோழி எவ்வளவோ விழிப்பாயிருந்தும், ஒரிருவர் அதை அறிந்துகொண்டனர்; ஊருக்குப் புதியவனய இளைஞனைத் தம் ஊரில் தொடர்ந்து கண்டி சிலர், அவர் காதல் ஒழுக் கத்தை மெல்ல அறிந்துகொண்டனர்; அது தோழிக்குத் தெரிந்தது; அதனல், இவன் இவ்வாறே பகற் காலத்தே தொடர்ந்துவரின், நாளடைவில் இவர் உறவினை ஊரார்
குறுந்தொகை : 289. கல்லாடனர்.
சேயாறு.நெடுந்துTரம்; துணைபரி-விரைந்தோடும் குதிரை; அசாவாது-பருந்தாமல்; உசாவுநரி-துணைபுரிவார்; நன்றுமன்நன்றாம்; தில்ல-விருப்பத்தைப் புலப்படுத்தும் ஒt இடைச் சொல்; வயச்சுரு.வன்மை மிக்க சுரு:மீன்; மாறி-விற்று; தரீஇய-கொண்டுவர. பனி இரும்பரப்பு-குளிர்ந்த பெரிய கடல்; சேர்ப்பன்-நெய்தல் நிலத் தலைவன்: இனி-இப்போது.