இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொன்மலர்
மிதிலைச் செல்வி சீதாப்பிராட் டிக்கு ஒரு பொய்மான் விதியான மட்டுமல்லாமல், வினையாகவும் அமைந்தது;நமக்கு இராமகாதை கிடைத்தது. இங்கே,பொய்மானோ அல்லது, பொன்மானோ வரவில்லைதான்!- ஆனாலும், அதன் உருவகச் சிதற லாகவும் உருவெளிச் சுடராகவும் வேடிக்கையான விதி விந்தையான ஆடுகளம் ஒன்றை அமைத்து விளை யாடுகிறது;அதன் ஏகபோக ஆதிக்கச் சூழ்நிலையிலே, நிலை உணர்ந்தும் நிலை மறந்தும்,புத்தகம் புதிய கதை ஒன்று விளையாடுகிறது; விளையாட்டுக் காட்டுகிறது.நமக்கு ஒரு சுமதி கிடைக்கிறாள்!-இந்தச் சுமதிக்குப் பொன்மான் கிடைத் ததோ, என்னவோ? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ஆகிவிடுகிறாள்!-உண்மை தான்;பிரச்சனை இங்கேதான் கரு வறை அமைத்துக் கொள்கிறது! சமுதாயம், பண்பாட்டின் இதய மெனில், இலக்கியத்தின் ஆன்மா வாக நவீனம் அமையும்.சுவையான புரட்சியும் ஆரோக்கியமான