பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பொன்மலர்

    மிதிலைச் செல்வி சீதாப்பிராட்
  டிக்கு ஒரு பொய்மான் விதியான 
  மட்டுமல்லாமல், வினையாகவும் 
  அமைந்தது;நமக்கு இராமகாதை 
  கிடைத்தது.
  இங்கே,பொய்மானோ அல்லது,  
  பொன்மானோ வரவில்லைதான்!-
  ஆனாலும், அதன் உருவகச் சிதற 
  லாகவும் உருவெளிச் சுடராகவும் 
  வேடிக்கையான விதி விந்தையான 
  ஆடுகளம் ஒன்றை அமைத்து விளை 
  யாடுகிறது;அதன் ஏகபோக 
  ஆதிக்கச் சூழ்நிலையிலே, நிலை 
  உணர்ந்தும் நிலை மறந்தும்,புத்தகம் 
  புதிய கதை ஒன்று விளையாடுகிறது;
  விளையாட்டுக் காட்டுகிறது.நமக்கு  
  ஒரு சுமதி கிடைக்கிறாள்!-இந்தச் 
  சுமதிக்குப் பொன்மான் கிடைத் 
  ததோ, என்னவோ? ஆனால், ஒன்று 
  மட்டும் நிச்சயம் ஆகிவிடுகிறாள்!-உண்மை 
  தான்;பிரச்சனை இங்கேதான் கரு 
  வறை அமைத்துக் கொள்கிறது!
   
    சமுதாயம், பண்பாட்டின் இதய 
  மெனில், இலக்கியத்தின் ஆன்மா 
  வாக நவீனம் அமையும்.சுவையான 
  புரட்சியும் ஆரோக்கியமான