இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தர சண்முகனார் 161
- நன்கு 'தமிழ்'என நவிலலாம் தவறிலை.
- அணியும் பொன்னும் அணிந்த இயைபென
- இனிமையும் தமிழும் இணைந்துள மாதோ!
- இனிமையும் மென்மையும் என்றும் மகுடமால்!
தாய்மைக் கன்னிமை
- தனித்தியங் குஞ்சீர் தமிழினுக் குண்டு
- இனித்திடக் கன்னலில் யாதிட வேண்டும்!
- தாய்மொழி தனக்கிலை தான்பன் மொழிக்குத்
- தாய்மொழி யாகியும் தானழி வுறாத
- 'தாய்மைக் கன்னிமை' தண்டமிழ்க் குண்டால்!
- ஆய்வுறின் இணையிதற் காதி முதல்வனே!
- அழியாக் கன்னிமை அருந்தமிழ் மகுடமே!
தமிழ்த் தெய்வம்
- பணியுங் கோயிலாப் பள்ளி தனைச்செய
- எணினார் பாரதி (20) இந்நூற் றாண்டில்.
- அரசி யாந்தமிழ் அன்னை தெய்வமா,
- அரண்மனை யனைத்தும் அருந்தமிழ்க் கோயிலா,
- அரசியல் வினையெலாம் ஆர்வழி பாடா,
- அரசியற் சிறப்பெலாம் அருமைசால் விழவா,
- அரசுள குடியெலாம் அன்புறு அடியரா,
- அரசமர் புலவோர் அருட்குர வோரா,
- அரசர் அறநிலைத் தலைவராத் தமிழுக்(கு)
- அமைத்தே மகுடம் ஆண்டனர் அந்நாள்.
தமிழ்ப் பெருமை
- இந்தியா முழுமையும் இமய வரம்பன்
- செந்தமிழ் கொண்டே சிறக்க ஆண்டான்
- என்பதை யவன்பேர் இயம்பு மன்றோ?
- அரசர் அழியினும் அருந்தமிழ்ப் புலவோர்