பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

55



54. தவறான செயல்களால் ஏற்பட்ட விளைவு

போலி மருத்துவர் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். ஆனால் தன் மருத்துவத்தினால் மரித்துப்போன ஒரு குழந்தைக்கு ஈடாகத் தன் மகனை அவர் கொடுக்க வேண்டியது நேரிட்டது. தன் கவனக் குறைவினால் இறந்து போன மற்றொரு குழந்தைக்காகவும் தன் மகளையும் ஈடாகக் கொடுக்க வேண்டியது நேர்ந்தது. இதனால் வேதனையுற்ற அந்த மருத்துவர் தம் மனைவியுடன் பிள்ளைகள் இருவரையும் பிரிந்து மனக் கவலையுடன் வாழ்ந்து வந்தார்.