இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
41
கருதியே. தன் கையில் பொருளில்லாமல், மற்றவர் கையிலுள்ள பொருளையெண்ணி ஒரு வினையைத் தொடங்கிவிட முடியாது. நம் கையில் உள்ள ஒரு பொருளை அடிப்படையாக வைத்துத் தான் நாம் ஒரு வினையைத் தொடங்குதல் வேண்டும். அது நாம் அச்சமில்லாமல், குன்றின் மீதிருந்து கொண்டு, கீழே நடக்கும் யானைகளின் சண்டையைப் பார்ப்பது போன்றதாகும் என்பது குறள்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
(758)