பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

செயலும் செயல் திறனும்



கூடாது. அப்படி நல்ல வினைகளைக் கடன் வாங்கிச் செய்யவும் செய்யலாம். அப்பொழுது நம்பால் இரங்கியோ, நாம் செய்யப் புகும் வினையின் பெருமை தெரிந்தோ, நமக்குக் கடன் தந்துதவும் சிலராகிலும் இருக்கிறார்களோ என்று பார்க்க வேண்டும். பிறகு, யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லையே என்று வருத்தப்படவோ, வினைச்சுமை தாங்காமல் பாதியில் விட்டுவிட்டு இழப்பேற்படுத்திக் கொள்ளவோ கூடாது.

திருவள்ளுவர் வினைவலி (47) என்று வலியறிதல் அதிகாரத்தில் வலியுறுத்தும் முதல் வலிமை அதுதான். அதை நம்மால் செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒன்றுமில்லாமல் அதைச் செய்துவிடமுடியும் என்று இறங்கிவிடக்கூடாது. பிறகு பரமார்த்த குருவின் சீடர்கள் கதையாகிவிடும். இவ்விடத்தில் இன்னொன்றை நன்கு விளங்கிக் கொள்ளுதல் ரேண்டும். வினைவலிமை என்பது பொருளைக் குறிக்கும் சொல்லன்று. பொருள் வலிமை என்பது வேறு. ஒரு வினைக்கு நாம் எவ்வளவு பொருளை ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அது நம்மால் இயலுமா என்பதும் நோக்கி நம் வலிமையை உணர்வதும், வினை வலிமையுள்தான் அடங்கும். பொருள் இல்லாவிடில் நாம் பொருளுதவி பெறும் திறன் நமக்குள்ளதா என்று பார்ப்பது தன் வலியுள் அடங்கிவிடும். வினைவலி என்பது உடல், உழைப்பு, ஈடுபாடு இவற்றை மட்டும் பொறுத்தது அன்று. வினைச்சுமை என்பது நம்மால் தாங்கக் கூடியதா என்பதில் பொருள் அளவையும் அடக்குதல் வேண்டும். பொருள் தேவை என்பது வேறு. பொருள் அளவு தெரிதல் என்பது வேறு. ஒரு வினைக்குப் பொருள் வேண்டும் என்பதும் அது நம்மிடம் உள்ளதா என்பதும் பொருள் வலிமையைக் குறிக்கும். ஆனால் அதற்கு எவ்வளவு பொருள் தேவையாக இருக்கும் என்று ஆய்வதும், அச்சுமை நம்மால் தாங்கக் கூடியதா, அந்த வலிமை நம்மிடம் உண்டா என்று எண்ணிப் பார்ப்பதும் வினைவலிமையுள் அடங்கும். அவ்வாறு போதுமான பொருள் இல்லாவிடத்து அதைப் பிறரிடம் கடனாகப் பெறுவது தன் வலியுள் அடங்கும். இவ்வேறுபாடுகளை ஒருவர் மிக நுட்பமாக அறிந்து கொள்ளுதல் மிக நன்றாம்.

3. பொருள், கருவி, காலம்

இனி, அறியாமை அகலும்படி ஆய்ந்து எண்ணிச் செய்ய வேண்டிய கூறுகளுள் குறளாசிரியர் வினைவலியையும் ஒன்றாகக் குறித்துள்ளார்.

பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

(675)

இக்குறளுள் வினைவலி நான்காவதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. பொருள் முதலாவதாகக் குறிக்கப் பெற்றது அதன் இன்றியமையாமை