“காமம் மகிழ்விக்கும்போது கடல் போன்றது; துயர் உறுத்தும்போதும் அது கடலைவிட மிக்கது.”
“காமக்கடலைக் கடக்க வழி அறியேன்; யாமத்தும் ஏமம் இன்றித் துயில் இழந்து வருந்துகிறேன்.”
“இரவு, அனைவரையும் துயிலச் செய்துவிட்டது; அதற்குத் துணை வேண்டுமே! அஃது என்னைத் தேடிக் கொள்கிறது.”
“இரவு நீள்கிறது; என உயிர் மாள்கிறது. பிரிவு என்னை ஆள்கிறது.”
“என் உள்ளம் காதலர் இருக்கும் இடம் தேடிச் சென்றுவிடுகிறது: கண்கள் என்னைவிட்டு நீங்காமல் தனியே வருந்திக் கண்ணிர் விட்டுக்கொண்டு இருக்கின்றன. மனத்தின் வாய்ப்புக் கண்களுக்கு இல்லை; தனிமை துயர் தருகிறது.”
“கண்களே காதலரைச் சுட்டிக் காட்டியது; முதல் குற்றவாளி கண்கள்; அவை துன்பப்படட்டும், கண்ணிர் வடிக்கட்டும்.”
‘பின்விளைவை நோக்காது அவசரப்பட்டு அவரைப் பார்க்க முனைந்தன; இப்பொழுது அவரைப் பார்க்க இயலாமல் வருந்துகின்றன”.
“கண் அவசரப்பட்டன; இன்று எள்ளல் பொருளாக மாறிவிட்டன; பிறர் நகைக்க இடம் தந்துவிட்டன.“