子安。 தொல்காப்பியம் - பொருளதிகாரம்
விளங்கு புகழ்க் கபிலன்' (புறம். 53) எனவும், நிலை கிளர் கூட னிளெரி யூட்டிய, பலர் புகழ் பத்தினி' (சிலப்பதிகாரம் பதிகம்
35-36) எனவும் வரும். இவ்வாறே ஏனையவற்றிற்கும் ஒட்டிக் கொள்க.
இனி எல்லாமாவன. ஒளியும் அளியுங் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியனவும் பிறவுமாம்,
1. ஒளியாவது : வெள்ளைமையின்மை.
2. அளியாவது : அன்புகாரணத்தால் தோன்றும் அருள்.
3. காய்தலாவது வெகுளி.
4. அன்பாவது: மனைவியர்கண்ணுந் தாய்தந்தை புதல்வர் முதலிய சுற்றத்தின் கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்.
5. அழுக்காறாவது : பிறர் செல்வ முதலியவற்றைப் பொறாமை.
6. பொறையாவது ; பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல்.
7. நிறையாவது மறை பிற ரறியாமல் ஒழுகுதல்.
8. அறிவாவது : நல்லதனலனுத் தீயதன்றீமையும் உள் ள வாறுணர்தல். இவை கண்டிலமென்று கடியப்படா கொள்ளும்
பொருளென்றார். இவை ஆசிரியனாணையன்றென்பது மேற் சூத்திரத்தாற் கூறுகின்றான். (இக)
ஆய்வுரை :
இது, மேல் முதல் கரு உரியெனப்பொருளைப்பாகுபடுத்
துணர்த்திய ஆசிரியர் அவற்றுள் உண்மை மாத்திரமுணர்த்திப்
பிழம்புணர்த்தப்படாதன வாகிய பொருள்கள் சிலவற்றை த்
தொகுத்துணர்த்துகின்றார்.
(இ~ள்) ஒப்பு, உரு, வெறுப்பு என வும், கற்பு, ஏர், எழில்