உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோரணவாயில்

3



நேரில் காண முடியாத நிலையில் இருந்த துரோணர் பின்னர் நேரில் கண்டு மகிழ்ந்து அவருடைய ஆசாரியர் ஆனாற்போல அடியேனும் பல்லாண்டுகள் நேரில் காணா நிலையிலிருந்து இறையருளால் காணப்பெறும் நிலையை அடைந்து - குருநாதராக அடைந்து - பிரதிவாதி பயங்கரச் சுவாமிகளை வாழ்க்கையில் பெறற்கரிய எல்லாப் பேறுகளையும் பெற்ற நிலையில் அவர்தம் சீரிய வாழ்க்கை வரலாற்றையும் பக்தியுடன் சுமார் எழுபது ஆண்டுக் காலம் ஆற்றிய வைணவத் தமிழ்த் தொண்டையும் மிக்க பக்தியுடன் பதிவு செய்கின்றேன்.