118 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
தவசீலியின் உதடுகள் குறுஞ்சிரிப்பை அரவணைத் தன. மீண்டும் கேள்விக்குறி உதித்தது: "ஸார், தியாகத்தைப் பற்றி ஒரு சமயம் நீங்கள் உங்கள் தொடர்கதையில் குறிப்பிட்ட வாசகம் என் உள்ளத்தைத் தொட்டு விட்டுவிட்டது. 'தியாகம் என்ற குணநலன் உள்ளத்திலே உதிரத்தோடு ஊறிப் பக்குவப்படும்; இந்த உயர்ந்த குணம்தான் மனிதனை மனிதனாக உயர்த்திக் காட்ட வல்லது!' என்று நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். ஸார்!"
ஞானசீலனின் பார்வை திசை பிரிந்தது; ஆனால், அவர் சிரிப்பு மட்டிலும் தவசீலியின் சிரிப்புடன் ஐக்கியப்பட்டு விடுவதையொத்து, அண்டிச் சென்றது, "சந்தோஷம்!"
இரு தரப்பிலும் பெருமூச்சுக்கள் எறியப்பட்டன. எரிந்தன!
"ஸார்!"
"ஊம்!"
"உங்களுக்கு ஆண்டவனைத் தெரியுமா, ஸார்!"
"தெரியுமே!"
"அந்த ஆண்டவனை நம்புகிறீர்களா?"
"நம்புகிறேன்!"
"விதியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?"
"ஆண்டவனை நம்புபவன் விதியை நம்பாமல் இருக்க முடியுமா? விதி என்பது தெய்வத்தின் சக்திக்கு ஒரு கிளை. ஆண்டவன் ஒரு தத்துவமென்றால், விதி அத்தத்துவத்திற்கு ஒரு நியதியாக ஆகிறது. அதன் மூலம்தான்