திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 33
'மனித மனத்தை ஆசை எனும் பற்று பற்றினால், அப்புறம், புற்று நோய்க்கும் இந்த மனத்துக்கும் ரவைகூட வேறுபாடு இருக்க வாய்க்காது!' எப்பொழுதோ விளையாட்டாகச் சிந்தித்த இக்கூற்று இப்பொழுது கூற்றுவன் வடிவில் வினையாகிச் சிரித்தது.
"ஸார், உட்காரலாமா ?"
கேட்ட குரலில், விநயத்தைக் காட்டிலும் பணிவு ஏறியிருந்தது.
கதை எழுதுபவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பது மெய்தான்.
ஞானசீலனுக்கு வையகத்தின் ஞாபகம் பிடிகயிறானது; தலையை ஏறிட்டுப் பார்த்தார். அதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. உடம்பில் ஒரு சிலிர்ப்பு: நரம்புகளில் ஒரு சூடு; நாணத்தில் ஒரு மோகம். "உட்காருங்கள்.உட்காருங்கள்!" என்று சொல்லிக் கொண்டே வந்த அவர், ஏனோ எழுந்து, நின்று, அவள் உட்காருவதைக் கண்ணாரக் கண்டு களித்தார்.
பெரிய இடத்துப் பிள்ளைக்குச் சின்ன விஷயத்துக்குக்கூடச் 'சுள்' என்று கோபம் வரும். அது போல, பத்துப்-பத்தரை மணிக்குள்ளாகவே செஞ்சுடர்ச் செல்வனுக்குக் கோபம் வந்துவிட்டது. கோடை மாறவில்லை பல்லவா?
"நீங்கள் நிற்கிறீர்களே?"
"அதற்காக, நீங்களும் எழுந்து நின்று விடாதீர்கள்!" என்று சொல்லிக் கொண்டே அவரும் உட்கார்ந்தார்.
அப்பொழுது கோசலை அம்மாள் அங்கு வந்தாள். வந்தவள், வந்திருந்த புதுப் பெண்ணைக் கண்டு முகம்
தி.சொ.நி-3