பக்கம்:நூறாசிரியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நூறாசிரியம்


இஃது அலைக்க- இப் பெண்ணைக் கையால் அடித்து வருத்த

ஈது அப்பே என- அவன் துணைக்குத் தன் தாயை அழைத்துக் கொண்டது போலவே, இவளும் அவன் துணையினும் வலிந்த துணை வேண்டி, அப்பே’ என விளித்தாள் போலும்!

யான் அலற ஒடி- யானும் அலறிப் புடைத்து ஓடி

வெப்புரை மாறி - வெம்மையான சுடு சொற்களை ஒருவருக்கொருவர் மாறி உரைத்து.

வீடு கிடத்தி- தன் மகனைப் பற்றியிழுத்து வந்து மீண்டும் படுக்கையில் கிடத்தி.

மேற்பணி மேய- விட்ட பணிகளை மேற்கொண்டு ஈடுபட்டு நிற்க,

கால்குடை சிறுக்கி-கால் குடைந்து நிற்கும் சிறுமி, ஒரிடத்தும் நிற்காமல் ஓடுதலும் வருதலும் ஆகிய கால்களைக் குடைந்து நிற்கும் கால்கள் எனக் கூறலாயிற்று.

மறுகின் இறங்கி- தெருவில் இறங்கி.

அப் பீறல் விளித்து- அப் பீறல் உடுத்த பையனை அழைத்து. பீறல். கிழிந்த துணி, இழிவு தோன்றக் கூறியது. தன் மகளொடு சேர்ந்து விளை யாடுதற்குத் தகுதியற்றான் என இழித்துக் கூறினள் என்றபடி

கரைக்கும் - பொருளற்று வெறும் வாய்ச் சொல்லாக உரையாடல். காகம் போல் கரைந்து நிற்றல்.

நாள் நீள் கட்டுரை - நாள் முழுதும் நீளும் தன்மையில் நெடிய உரையாடல்-கதை.

உரைக்கப் போதாது ஒரு சிறு நாவே - உரைத்துத் தீராது என்பதை, அதனை எடுத்துக்கூற என்சிறு ஒருநா போதாது என்று கூறினாள் என்றபடி

‘நீ என்னைப் பிரிவேன் என்று கூறுகின்றாய். நான் நாள் முழுதும் குறும்பு மிகுந்த நின் மகளொடு எங்கன் ஆற்றியிருப்பேன். அவளை அடக்கவும் ஆகேன் என் மனைவினைகளைச் செய்யவும் அவள் விடுவாள் அல்லள். நாளும் தெருவிற் போந்து அவளொத்த பிள்ளைகளுடன் வாயும் கையும் ஆடி வம்புரைக்கு என்னை ஆளாக்குகின்றாள். அதன் பொருட்டு நான் துயருறுவது மிகுதி. எனவே எம் இருவரையும் விட்டுப் போவது நினக்கு ஏற்றதாகாது’ என்று இறைஞ்சிக் கூறினாள் தலைவி என்க.

இது முல்லை யென் திணையும், பிரிநிலைக்கழுங்கல் என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/74&oldid=1181278" இலிருந்து மீள்விக்கப்பட்டது