பக்கம்:நூறாசிரியம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

நூறாசிரியம்

கொடுத்துத் 'தமிழ் வெல்க' என்று வீறுணர்வுடன் முழக்கி, மண்டுகின்ற நீர் கண்களை மறைக்கும்படி, 'நீ சென்று விடு’ என்று விடுத்த சிறந்த செயலை எண்ணியே!

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுக் காவலர் மேல் கல்லெறிந்த இளந்தையன் ஒருவன், காவலரால் துரத்தி வரப்படுங்காலை ஆங்குள்ள இல்லமொன்றினுள்ளே ஓடிப் புகுந்தானை, முதியோள் ஒருத்தி நெற்குரம்பையினுள்ளே ஒளித்து வைத்துக் காத்து, அக்காவலர் வெளியேறிய பின்னை, வெளியில் விடுத்துப் போற்றிய சீர்மையைப் பாராட்டியது.

'மல்கு நீர்விழி மறைப்பச் செல்கென விடுத்த சீர்மை நினைந்தே, பாடுக புலவீர் பீடுடைப்பாவே!’ என இறுவாய்த்தொடையாக இணைத்துக் காட்டுக.

பாடுக புலவீர் பீடுநடைப் பாவே - பாடுங்கள் புலவர்களே (இத்தகைய) பெருமை மிகு பாடல்களையே!

புலவர்கள் இக்கால் பாடுபொருளாக, வீணான வெறுஞ் செயல்களை, வெற்றுச் சொற்களால், கற்பனை நயமும் வளமும் இன்றி, வெறிதாகப்பாடித் தம் புலமைத் திறனைப் புழுதியில் இறைக்கும் புல்லிய செயல்களைத் தவிர்த்து, இத்தகைய அச்சமும் நகையும், வீரமும் வெகுளியும் வியப்பும் உவகையும் அன்பும் அமைதியும் பொலிந்த, இலக்கிய நயஞ்செறிந்த பாக்களையே மக்கள் மனங் கொள்ளவும் நலந்துளும்பவும் பாடி மகிழ்தலும் மகிழ்வித்தலும் வேண்டும் என்னும் வேண்டுகையாகப் பாடியதாம் இப் பாடல். என்னை?

'ஏவா அரைசின் எண்ணியது துணியும், காவலர் வரவும் ‘சூர்படு ஓதையும் எழுச்சியும் சூடுமா, ஊர்கொள் அமலையும் என்பதில், அச்சமும்

'சுவடிச்சிறாஅர் கவடியின் ஆட்ட, ஊனும் உறக்கமும் துறந்து, பகலிரவாக் காவற்படுப்பதும்’ என்பதில் நகையும்

‘எம்மோன் ஒருவன் முன்பல் தெறித்துக் குருதி பிதிரக் கூர்ங்கல் எற்றிக் கடிதின் நுழைந்தோர் செங்கண் விடலை, தும் இற்புரத்துக் கரந்தானாக’ என்பதில் வீரமும்

அவனைக் கைப்படத் தொடர்ந்தோம்; காட்டுதிர்’ என்பதில் வெகுளியும்;

‘வந்தோர் மனம்பெறக் கழிய உட்புகுந்து நென்னிறை குரம்பை ஒளிய உள்ளிறக்கிய புன்றலைச் சிறுவனை அகவிப்புறந்துக்கி என்பதில் வியப்பும், உவகையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/294&oldid=1221442" இலிருந்து மீள்விக்கப்பட்டது