310
நூறாசிரியம்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் என்பார் தமிழ் மக்களை ஆகியும் என்றார். மகனை என்பதன்கண் ஐகாரம் அசைநிலை உம்மை தொக்கது.
தாய்மொழியாவது இயல்பின் வந்த உரிமைமொழி.
பூம்று நெஞ்சு உகப்புரிந்து : பூப்பறு நெஞ்சாவது மலர்ச்சியுறாத மனம் கல்வி கேள்விகளானும் உலகியலறிவானும் பண்பட்டுப் பரந்த நோக்கும் நடுநிலையுணர்வும் பொது நல விழைவுங்கொண்டு விரிவுறாது, போலி நாகரிகப் போக்கும் ஆரவாரச் செருக்கும் தன்னல வேட்கையும் கொண்ட மனம்,
உகப்புரிதலாவது - மனம் விரும்பியவாறு புல்லிய செயல்களைச் செய்தல், மனம் பூப்பறு நெஞ்சு எனப்பட்டமையின் அதன் வழிபட்ட செயல்களும் புல்லியவை எனப்பட்டன. அவையாவன வெற்றாரவார வெறும்பகட்டுப் போலி நாகரிகச் செயல்களும் பிறவுமாம்.
நானொடு காப்புறு நாவின் மீச்சுவை மிசைந்து- நாவிற்கு நாணமாவது அவையல் கிளவிகளை இடக்கர் அடக்காது பேசக் கூசுதல்.
காப்பு - கட்டுப்பாடு அதாவது தீயவற்றில் தலைப்படாத அடக்கம். நாவடக்கமாவது பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்னுஞ் சொற்குற்றங்களைத் தவிர்த்தல்.
இனித் தன் முயற்சியின்றிப் பிறருழைப்பின் வந்தவற்றைச் சுவைத்து உண்ணற்கும் ஏழை எளியோர் பசியால் வாடப் பார்த்தும் சிறிதும் இரங்காது உண்ணற்கும் அயலவர் முகஞ் சுளிக்குமாறு அநாகரிகமாக சுவைத்து உண்ணற்கும் கூசாமையையும் நாவிற்குரிய நாணமின்மையாகவும், அக்காலத்திலும் நோயுற்றவிடத்தும் சுவையைத் தவிர்க்கமாட்டாமல் ஏலா வுண்டியை விரும்பியாங்கு உண்ணுதலையும் நாவடக்கமின்மையாகவும் கொள்ளலுமாம்.
பசியும் உடனலமும் நோக்கியுண்ணாது சுவையையே பெரிதும் விரும்பு யுண்ணலைக் குறித்து மீச்சுவை மிசைந்து என்றார்.
செவித்துளை-கரைந்து : அரும்பொருள் குறித்து ஆன்றோர் கூறும் நறுந்தமிழ்ச் சொற்களை விரும்பிக் கேளாமையின் செவியைத் துளை என்றார்.
- இருவர் மணிவிளக்கத்து ஏழிலார் கோவே
- குருடேயும் அன்றுநின் குற்றம் - மருடீர்ந்த
- பாட்டும் உரையும் டயிலா தனவிரண்டு
- ஓட்டைச் செவியும் உள