பக்கம்:நூறாசிரியம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

நூறாசிரியம்


பசுமையோர் - இளமையோர்.

நூல்முகம் புகூஉம் - பொத்தகத்து முகஞ்செலுத்தும், கல்வி கற்கும்.

செய்து வெள்ளம் ஒப்போர் - செந்நிறஞ்சான்ற புதிய வெள்ளம் போல் அலைவும் அடர்வும் விரைவும் உடைய இளைஞர் கூட்டம்.

தம் புதுக்கொள்கை - 'தமிழே வேண்டும்; இந்தி வேண்டாம்' என்னும் புதுமைக் கொள்கை.

தெருத்தொறும் முழக்கி - தெருத்தொறும் வலஞ்சென்று முழக்கி,

வைகறை - தறுகனோரே - முன் காலை தொடங்கிக் கதிரவன் போக்கொடு தாமும் பகல் முழுதும் நடந்து, நள்ளிரவிலும் கண்மூடாத வீரம் மிக்கவர்.

மண்ணும் - இலையே பிறரின் ஆட்சி நிலத்தைத் தன் ஆளுமை நிலத்தொடு இணைத்துக் கொள்ளும் ஆசை இவர்களுக்கு இல்லை.

பொன்னும்--இலையே-பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசையில்லாதவர்.

பொருதும்--அரும்பிலர்-போராடவேண்டும் எண்ணமும் தோன்றாதவர். இயல்பான எழுச்சி கொண்டாராதலின்.

நுண்கலை - போர்க்குரிய நுண்ணிய முறைகள்.

கவடும் படையும்- போருக்கான சூழ்ச்சிகளும் கருவிகளும்

படையும் மலைந்தியர்- தம்மைத் தடுத்து நிறுத்தும் காவலர் படைக்கும் அஞ்சி மயங்கிப் பின்வாங்காதவர்.

இறுதல் - இற்றுப் போதல், தனித் தனியாகப் பிரிந்து போதல்.

விறல் - வெற்றி; மறல் - வீரம்.

ஊண்தவிர்நோன்பு - ஊணும் தவிர்த்த கொள்கையுரம்.

உயிர்தீர்முயல்வு- உயிர் தீரும் வரை செய்யப் பெறும் முயற்சி.

காண்குநர் கண்ணிர் கலுழ- இவர்களின் எழுச்சியையும், வீரவுணர்வையும், அதே பொழுது அவர்களின் இளமையையும் கல்வி பயில வந்தார் போராட வேண்டி வந்ததே என்னும் நினைவும், பார்ப்பவர் கண்களில் கண்ணிரை வருவித்தன என்க.

நன்றும் தீதும்தினையாராகி- கல்வியால் ஏற்படும் நன்மையும் இவ்வகைப் போராட்டங்களால் நேரும் தீமையையும் நினைத்துப் பாராதவராகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/262&oldid=1221100" இலிருந்து மீள்விக்கப்பட்டது