இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
466
கெடிலக்கரை நாகரிகம்
தாங்கள் விளையாடும் உழக்கைத் தூக்கிக்கொண்டு போய்விட்ட காக்கையைப் பார்த்து உழக்கைப் போடுமாறு கேட்டுச் சிறுமியர் பாடுவது:
- "காக்காச்சி உழக்கைத்தா
- கம்பைக் கொட்டி உழக்கைத்தா
- கம்மாசும்மா உழக்கைத்தா - எங்கள்
- அம்மா அடிப்பாள் உழக்கைத்தா." 2
சிறுவருள் ஒரு குழுவினர் பெண் கேட்க, மற்றொரு குழுவினர் பெண் கொடுக்க மறுத்து விளையாடும் ஆட்டப் பாடல்:
- "இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணுண்டோ - சிறு
- எலுமிச்சங் காயிலே பெண்ணுண்டோ
- "இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணுண்டோ - சிறு
- இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணில்லே - சிறு
- எலுமிச்சங் காயிலும் பெண்ணில்லே
- இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணில்லே - சிறு
- தாலி பீலி பெண்ணுண்டோ - சிறு
- தாமரைக் காயிலே பெண்ணுண்டோ
- தாலி பீலி பெண்ணுண்டோ - சிறு
- தாலி பீலி பெண்ணில்லே - சிறு
- தாமரைக் காயிலும் பெண்ணில்லே." 3
- தாமரைக் காயிலும் பெண்ணில்லே."
- தாலி பீலி பெண்ணில்லே - சிறு
- அதோ பாரு காக்கா
- கடையிலே விக்கிது சீக்கா
- பொண்ணு வரா சோக்கா
- எழுந்து போடா மூக்கா."
- "சின்னகுட்டி ஆம்படையான் சீமானாம்
- சிங்கப் பூருகப்பலுக்குப் போனானாம்
- அங்கே ஒருத்தியே கண்டானாம்
- அடிபட்டு உதைபட்டு வந்தானாம்
- ஆவட்ட சோவட்ட கொண்டானாம்
- ஆக்கின சோத்த தின்னானாம்.’’ 4