இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
கெடிலக்கரை நாகரிகம்
- "உவப்புடன் ஒரு சீராமனும் வழிபட்
- டுள்ளதும் இந்நடு நாடே."
மற்றும், புலவர் வரந்தருவார் வில்லிபாரதத்தின் பாயிரச் செய்யுளில், “திருமுனைப் பாடிநாடு நீர்வளம் மிக்கநாடு; பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதலாழ்வார் மூவரும் கோவலூரில் ஒன்று சேர்ந்து திருமாலைத் தொழுதநாடு; தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவராகிய நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறந்த நாடு"- என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவருடைய பாடற் பகுதிகள் வருமாறு:
- "தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
- திருமுனைப் பாடிநன் னாdu”
- "பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற்
- பாவலர் பாதிநாள் இரவில்
- மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி
- முகுந்தனைத் தொழுதநன் னாடு
- தேவரும் மறையும் இன்னமுங் காணாச்
- செஞ்சடைக் கடவுளைப் பாடி
- யாவரும் மதித்தோர் மூவரில் இருவர்
- பிறந்த நாடு இந்தநன் னாடு."
இவ்வாறு புலவர் பலரால் போற்றிப் புகழப் பெற்ற பெருஞ்சிறப்பிற்குரியது திருமுனைப்பாடிநாடு. இலக்கியங் களிலேயன்றிக் கல்வெட்டுக்களிலும் ‘திருமுனைப்பாடிநாடு’ என்னும் பெயர் ஆட்சியைக் காணலாம்.
- [1]"திருமுனைப் பாடிக் கீழாமூர் நாட்டுத் திருவாமூர்
- ஊரோம்"
என்றும்
- "திருமுனைப்பாடி நாட்டுப் பாண்டையூர் மங்கலங்
- கிழான்"
என்றும் கல்வெட்டுக்களில் இப்பெயர் ஆளப்பட்டுள்ளமை காண்க சேதிநாடு
இந்நாட்டிற்குச் சேதி நாடு’ என்னும் பெயரும் இருப்பதை,
- [2]"சேதிநன் னாட்டுநீடு திருக்கோவ லூரின்மன்னி"