பக்கம்:பழைய கணக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

“புறப்படும்போதே பூனே குறுக்கே போகிறதே, சகுனம் சரியில்லையே!”என்று மனம் சஞ்சலப்பட்டது.

“அதெல்லாம் இந்த ஊரில் ரொம்ப சகஜம். பூனைகள் இப்படித்தான் அடிக்கடி குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாங்களெல்லாம் அதைப் பொருட்படுத்த மாட்டோம். இதையெல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என்று சதானந்தம் எனக்குச் சமாதானம் கூறிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்து ஏறிக் கொள்ளச் சொன்னார்.

விமான நிலையம் போகும் வழி முழுதும் அந்தப் பூனை குறுக்கே வந்தது பற்றியே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.

“இது வெளிநாடு. இங்கேயல்லாம் சகுனம் பலிக்காது” என்று உள்ளத்தில் ஒரு வாதம் உருவாகியது. ‘எங்கேயிருந்தால் என்ன? பூனை பூனை தானே!’ என்றது இன்னொரு வாதம்.

பாரிஸ் போய்ச் சேர்ந்தோம். உலகப்புகழ் பெற்ற ‘மூலா ரூஜ்’ (Moulin Rouge) அரங்குக்குச் சென்று அன்று மாலை அங்கு நடைபெற்ற காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தச் குழ்நிலையிலும் அந்தப் பூனையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை. காலையிலிருந்து அலைச்சலும் பட்டினியும் வேதனையும் சேர்ந்து களைத்துப் போயிருந்தேன். காட்சிகளில் உள்ளம் லயிக்கவில்லை.

பாதி ‘ஷோ’ வில் சட்டென்று கண்கள் இருண்டு போய் மயங்கிக் கீழே சாய்ந்து விட்டேன். உடனடியாக டாக்டர்கள் இரண்டு பேர் வந்து பார்த்துப் பரிசோதித்தார்கள்.

“உடம்பில் சர்க்கரை குறைந்திருக்கிறது” என்றனர். உடனே தனி அறைக்கு அழைத்துப் போய் க்ளுகோஸ் தண்ணிர் கொடுத்து மயக்கத்தைத் தெளிய வைத்தனர். சற்று நேரத்துக் கெல்லாம் புத்துணர்ச்சி பெற்று விட்ட போதிலும் ‘ஷோ’ வில் மனம் செல்லாததால் ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம்.

மறுநாளே பாரிஸிலிருந்து நியூயார்க் போய் அங்கிருந்து நியூஜெர்ஸியை அடைந்தோம். பூனை குறுக்கே போனது, ‘ப்ளாக் அவுட்’ ஆனது — இரண்டு நிகழ்ச்சிகளுமே கெட்ட சகுனங்களாக எனக்கு உள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தன. “என்னவோ, ஏதோ” என்று ஒரு கிலி சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது. காலையில் படுக்கையை விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/65&oldid=1146007" இலிருந்து மீள்விக்கப்பட்டது