பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? பலர் கிடக்கின்றனர். அவர்களுடன் சேர வாரும்! என்று பரிகாசமாகப் பேச ஆரம்பித்தான். ஆர்தர் நெஞ்சில் கோபம் பொங்கி எழுந்தது. ஆனல் அவரால் என்ன செய்ய முடியும்? அவர் பலமெல்லாம் எவ்விதமாகவோ மாயமாக மறைந்து போய்விட்டதே. கையைக்கூடத் தூக்க முடிய வில்லையே. யாதொன்றும் பேசாமல் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு வெட்கி நின்றர். சரி, உம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனல் நீர் அரசர் ஆயிற்றே; அதனுல், ஒன்று கூறுகிறேன் ; கேளும். இன்னும் ತ್ಲೆ காலத்திற்குள் ' பெண்கள் விரும்புவது எது?” என் னும் கேள்விக்கு விடை தெரிந்து வந்து கூறுவீ ராயின் இப்பொழுது உமக்கு உயிர்ப் பிச்சை தருகிறேன். என்ன சொல்கிறீர்? என்று அந்த அரக்கன் முழங்கின்ை. H அரக்கனத் தொலைக்க இயலவில்லை. அரச நீதி செய்ய முடியவில்லை. அந்தப் பெண்ணுக்கு அளித்து வந்த வாக்கு கிறைவேற்றப் பெறவில்லை. இப் பொழுது இவனிடம் உயிரையும் தானமாகப் பெற வேண்டியிருக்கிறதே. என் செய்வார்? அவர் மனம் பட்ட பாடு ஆண்டவனே அறிவார். ஆல்ை உயிர் யாருக்கும் இனியதோர் பொருளன்ருே ? r அதல்ை அந்தத் துன்மார்க்கனுடைய கிபந்தனையை 67