அவள்:செ ங்கதிர் வந்தது!
குங்குமப் பொட்டுப்போல்
எங்கெங்கும் பொன்னுெளி அத்தான்!-
தைத் திங்களும் வந்ததே அத்தான் !
1
அவன் :நீர் நிலை பூத்தது!
நெல்வயல் காய்த்தது!
ஊரெல்லம் பொங்கலோ பொங்கல்நாம்
உண்டு மகிழ்வோம் பாற்பொங்கல்!
2
அவள் : குன்றம் மணக்குது !
தென்றல் அடிக்குது!
மன்கதிர் வாழ்த்துவோம் அத்தான் !-ஊர்
மருங்கிடை ஆடுவோம் அத்தான்!
3
அவன் : அருங்கதிர், தைக்கதிர்
அலர்ந்தது விண்ணிடை!
வருங்கதிர் வாழ்த்துவோம் முன்னர்!குன்ற
மருங்கிடை ஆடுவோம் பின்னர்!
4
.
அவள் : களிவண் டிசைக்குதே!
காட்டா றழைக்குதே!
ஒளிப்புனல் ஆடுவோம் அத்தான்!-பொங்கற்
களிப்பினிற் பாடுவோம் அத்தான்!
5