இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
கொடிமுல்லை
'இந்நிலையில் இருக்கின்ற தமிழர் நாட்டில்
கொடிமுல்லை என் செய்வாள்? பேதை' என்று
தன்னுள்ளே நலம்பாடி எண்ண மிட்டான்.
மானவன்மன் அரசிக்குத் தலைவ ணங்கிச்
சென்றிட்டான்; செங்காந்தள் புலவன் நோக்கிச்
செப்புகின்றாள்; 'கயவாகை மீண்டும் வென்று
தென்னிலங்கை இவனாளச் செய்வோம்; என்றன்
திருமகளை இவனுக்கே கொடுப்போம்' என்றாள்.