இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாணிதாசன்
9
நெடுமூச்சு விட்டழகன் நிமிர்ந்தான்; 'ஏதோ
நினைவினிலே படிந்திருந்தேன்; உன்னிடத்தில்
நெடுநாளாய் ஒன்று சொல்ல நினைத்தேன் தோழா!
நினைவெல்லாம் அவள் பறித்தாள் சோலை தன்னில்;
தொடுவேலை மேல் நினைவு பாய வில்லை;
அவள் தூய விழிஎங்கும் தோன்று' தென்றான்.
'சுடுகாதல் நோய்வலிமை கண்டேன்! கண்டேன்!
அஞ்சாதே!' என்று நலம் பாடி சொன்னான்.