இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாணிதாசன்
17
நலம்பாடி இவையெல்லாம் கேட்டி ருந்தான்;
'நான்செய்வ திதிலொன்று மில்லை' யென்றான்.
கலங்கியகண் ணானழகன் புலவன் நோக்கிக்
'கரையேற்று வாழ்த்திடுவேன்; இன்றேல் வீழ்வேன்;
கொலை உன்மேல் சாருமடா, தோழா ! என்னைக்
குறைகூறிப் பயனில்லை; காப்பாய்' என்றான்.
'நிலையாகச் சொல்லுகிறேன் : அழகா, என்னை
நீநம்பிப் பயனில்லை; மறந்தி' டென்றான்.
கொ—2