பக்கம்:தம்ம பதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ☐ தம்ம பதம்


3. கர்வம் [மானம்]

4. தற்புகழ்ச்சி [ஒளத்தத்தியம்]

5. அறியாமை [அஜ்ஞானம்]

மேலே கூறிய பத்து மனோபாவங்களும், தசஸம்யோ ஜனங்கள் எனப்படும். ஸம்யோஜனங்கள் - விலங்குகள். இந்த மனோபாவங்களால் உலக வாழ்வில் பற்று உண்டாகின்றது.

தேர்ந்து மேலே உயர வேண்டிய ஐந்து (பஞ்ச பலங்கள்):

1. சிரத்தை, 2. சாமர்த்தியம், 3. ஞாபகம், 4.மனனம், 5. ஊகித்தல் அல்லது ஞானம்.

கடக்க வேண்டிய ஐந்து தளைகள் :

1. அவா [ராகம்]

2. வெறுப்பு [துவேஷம் ]

3. மயக்கம் [மோஹம்]

4. கர்வம் [மானம்]

5. பொய்க்காட்சி [திருஷ்டி]

இந்த ஐந்துக்கும் பதிலாக உருவம் [ரூபம்],உணர்ச்சி [வேதனை], நினைப்பு [ஸம்ஜ்ஞை], முற்குறிப்பு [ஸம்ஸ்காரம்], அறிவு, [விஞ்ஞானம்] என்ற ஐந்து ஸ்கந்தங்களையும் கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/102&oldid=1360171" இலிருந்து மீள்விக்கப்பட்டது